
‘‘ஹிஜாப் அணிந்து வந்தால் நகை விற்க மாட்டோம்’’, என்று தமிழ்நாடு நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’பாதுகாப்பு காரணங்களுக்காக ஹிஜாப் அணிந்து வருவோருக்கு நகை விற்பனை செய்ய மாட்டோம்: நகை வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இதுபோன்ற எந்த அறிவிப்பையும் தமிழ்நாடு நகை வியாபாரிகள் சங்கம் வெளியிடவில்லை என்று தெரியவந்தது. அந்த சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி தரப்பில் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.
அடுத்தப்படியாக, ஊடகங்களில் இதுபோன்று ஏதேனும் செய்தி வந்துள்ளதா, என்று விவரம் தேடினோம்.
அப்போது, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி நகரம் மற்றும் பீகார் மாநிலத்தில் முகமூடி, புர்கா அணிந்து வரும் நபர்களுக்கு, பாதுகாப்பு காரணங்களுக்காக நகை விற்க மாட்டோம், என்று அங்குள்ள நகை வியாபாரிகள் சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டதாக, செய்திகள் காணக்
கிடைத்தன.

செய்தி ஆதாரம் இதோ…
The Hindu Link l UNI India l Money Control
இதன்மூலமாக, பீகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலத்துடன் தொடர்புடைய செய்தியை எடுத்து, தமிழ்நாட்டு அரசியலுடன் இணைத்து, வதந்தி பரப்புகிறார்கள், என்று தெளிவாகிறது.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட தகவல், தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
Title:ஹிஜாப் அணிந்து வந்தால் நகை விற்க மாட்டோம் என்று நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்ததா?
Fact Check By: Pankaj IyerResult: Misleading


