‘’வயநாடு வெள்ள பாதிப்பு’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு சிசிடிவி காட்சி பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ நினைத்து பார்க்கவே முடியாத ஆபத்தில் வயநாடு.

நமக்கும் இது ஒரு பாடம்.. நீலகிரி, வால்பாறை, கொடைக்கானலில் கட்டுப்பாடற்ற காடழிப்புக்கும், கட்டுமானங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.

ஊட்டி, கொடைக்கானலை மாநகராட்சியாக மாற்றும் முடிவையும் திமுக அரசு கைவிட வேண்டும்.’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30, 2024 அன்று கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக, முண்டகை, மேப்பாடி, சூரல்மலா போன்ற இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம், வயநாடு நிலச்சரிவு தொடர்பாக, சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவுகின்றன. நாமும், அவை பற்றி ஃபேக்ட்செக் கட்டுரை வெளியிட்டு வருகிறோம்.

Fact Crescendo Tamil Link 1 l Fact Crescendo Tamil Link 2 l Fact Crescendo Tamil Link 3

இந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு வதந்திதான் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட சிசிடிவி காட்சி பற்றிய தகவலும்…

ஆம், வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட நாள் 30.07.2024 ஆகும். ஆனால், மேற்கண்ட சிசிடிவி பதிவுக் காட்சியில் 16.06.2024 என்று தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலமாக, இது வயநாட்டில் பதிவு செய்யப்பட்டதல்ல, என்று தெளிவாகிறது.

அடுத்தப்படியாக, இது எங்கே எடுக்கப்பட்டது என்று விவரம் தேடினோம். அப்போது, இது சீனாவில் ஏற்பட்ட வெள்ளம் என குறிப்பிட்டு, ஏற்கனவே சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட சில ஆதாரங்கள் நமக்கு கிடைத்தன.

vk.com l dailymotion l tiktok

கூடுதல் ஆதாரம் இதோ…

எனவே, கடந்த ஜூன் மாதம் சீனாவில் எடுக்கப்பட்ட சிசிடிவி பதிவுக் காட்சியை, வயநாடு நிலச்சரிவுடன் தொடர்புபடுத்தி, வதந்தி பரப்புகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:‘வயநாடு வெள்ள பாதிப்பு’ என்று பரவும் சிசிடிவி காட்சி உண்மையா?

Fact Check By: Fact Crescendo Team

Result: MISLEADING