
‘’இந்தி ஆதிக்கம் காரணமாக, திமுக.,வில் இருந்து வெளியேறுகிறேன்,’’ என்று செந்தில் குமார் அறிவித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சமீபத்தில் இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திமுக தலைவர்கள் சிலர் இந்தி தெரியாது என்று கூறியதாகவும், இதற்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கண்டனம் தெரிவித்ததாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது.
Puthiyathalaimurai Link l One India Tamil Link
இந்நிலையில், இந்தி மொழி ஆதிக்கத்திற்கு திமுக துணை போவதாகக் கூறி அக்கட்சியில் இருந்து வெளியேறுவதாக, அக்கட்சியின் தருமபுரி தொகுதி எம்.பி., செந்தில்குமார் அறிவித்தார் என்று சமூக வலைதளங்களில் மேற்கண்ட வகையில் தகவல் பரவுகிறது.
ஆனால், இவ்வாறு புதிய தலைமுறை ஊடகம் எந்த செய்தியும் வெளியிடவில்லை. இதுபற்றி நாம் திமுக ஐடி பிரிவு மற்றும் புதிய தலைமுறை தரப்பில் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.
எனவே, செந்தில்குமார் பெயரில் சிலர் வேண்டுமென்றே வதந்தி பரப்புகின்றனர் என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:இந்தி ஆதிக்கம்: திமுக.,வில் இருந்து வெளியேறுகிறேன் என்று செந்தில் குமார் அறிவித்தாரா?
Written By: Fact Crescendo TeamResult: False
