‘’ பாஜக மற்றும் மோடியை அதிமுக.,வினர் விமர்சிக்கக் கூடாது,’’ என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட வகையில் எடப்பாடி பழனிசாமி எதுவும் பேசினாரா என்று செய்தி ஆதாரம் தேடினோம். ஆனால், இது போலியான நியூஸ் கார்டு என்று தெரியவந்தது.

கூடுதல் ஆதாரத்திற்காக, புதிய தலைமுறை மற்றும் அதிமுக ஐடி பிரிவு தரப்பிலும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.

உண்மையான நியூஸ் கார்டு மற்றும் போலி நியூஸ் கார்டை ஒப்பீடு செய்து கீழே இணைத்துள்ளோம்.

பொதுவாக யாரையும் தரக்குறைவாக விமர்சிக்கக்கூடாது என்று குறிப்பிட்டே அதிமுக பிரிவினருக்கு எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாடு விதித்துள்ளார். பாஜக மற்றும் மோடியை விமர்சிக்கக்கூடாது என்று அவர் எங்கேயும் கூறவில்லை.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி போலியானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:பாஜக மற்றும் மோடியை அதிமுக.,வினர் விமர்சிக்கக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டாரா?

Written By: Fact Crescendo Team

Result: Altered