தாத்தா ஆக வேண்டிய வயதில் தந்தை; ஜெயக்குமார் பற்றி பகிரப்படும் போலிச் செய்தி…

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’தாத்தா ஆக வேண்டிய வயதில், நான் தந்தையானது என்னவோ உண்மைதான்– ஜெயக்குமார்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

இதனைப் பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ஷேர் செய்வதைக் கண்டோம்.

Twitter Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
கடந்த 2020ம் ஆண்டு சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரத்தில், அப்போதைய ஆளுங்கட்சியை சேர்ந்த சிலருக்கும் தொடர்பிருப்பதாக, தகவல் பரவிய நிலையில், இதனை அப்போது அமைச்சராக இருந்த ஜெயக்குமார் மறுத்திருந்தார்.

இந்த சூழலில், மீண்டும் மேற்கண்ட வகையில் ஜெயக்குமார் பேசியதாகக் குறிப்பிட்டு, தந்தி டிவி லோகோவுடன் சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்படுவதால், இப்படி எங்கேயும் செய்தி வெளியானதா என விவரம் தேடினோம்.

அப்போது, ‘’சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகச் சிலர் கேள்வி கேட்கின்றனர். சந்தேகம் இருக்கும்பட்சத்தில் மறு விசாரணை நடத்தலாம். எந்த பிரச்னையும் இல்லை. மடியில் கனமிருந்தால் வழியில் பயம் இருக்கும். மடியில் கனமில்லை, பயம் எதுவும் இல்லை,’’ என்று ஜெயக்குமார் பேசியதாக ஒரு செய்தி காண கிடைத்தது.

Dinamani News Link

ஆனால், ‘’தாத்தா ஆக வேண்டிய வயதில் தந்தை ஆனது என்னவோ உண்மைதான். அதற்காக எல்லா பெண்கள் விவகாரத்திலும் என்னை தொடர்புபடுத்துவது அறமல்ல,’’ என்று ஜெயக்குமார் எங்கேயும் பேசவில்லை.

இதையடுத்து, தந்தி டிவியின் டிஜிட்டல் பிரிவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். அவர்கள், ‘’வழக்கம்போல இது எங்களது பெயரில் பகிரப்படும் போலியான செய்தி,’’ எனக் குறிப்பிட்டனர்.

தந்தி டிவி வெளியிட்ட உண்மையான செய்தி கீழே தரப்பட்டுள்ளது. இதனை எடிட் செய்து, மேற்கண்ட வகையில் வதந்தி பரப்பியுள்ளனர்.

எனவே, வேண்டுமென்றே அரசியல் உள்நோக்கத்துடன பகிரப்படும் போலியான செய்தி இது என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:தாத்தா ஆக வேண்டிய வயதில் தந்தை; ஜெயக்குமார் பற்றி பகிரப்படும் போலிச் செய்தி…

Fact Check By: Pankaj Iyer 

Result: Altered

1 thought on “தாத்தா ஆக வேண்டிய வயதில் தந்தை; ஜெயக்குமார் பற்றி பகிரப்படும் போலிச் செய்தி…

  1. இம்மாதிரி தற்போது இருக்கின்ற தமிழக அரசில் மின் வெட்டு தமிழக ம் எங்கும் உள்ளது என்கிறார் கள் அதன் உண்மை தன்மை யையும் கண்டு வெளியிட வேண்டுகிறேன்

Comments are closed.