சமஸ்கிருதம் தவிர மற்ற மொழிகளில் அர்ச்சனை- தடை விதிப்போம் என்று அமித் ஷா கூறினாரா?

அரசியல் | Politics தமிழகம்

‘’சமஸ்கிருதம் தவிர மற்ற மொழிகளில் அர்ச்சனை செய்வதற்கு தடை விதிப்போம்,’’ என்று அமித் ஷா சொன்னதாகக் கூறி ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link Archived Link 

Rowthiram Pazhagu 

எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதில் தந்தி டிவி வெளியிட்டது போன்ற ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்து, ‘’சமஸ்கிருதம் தவிர்த்த மொழிகளில் அர்ச்சனை செய்வதை சட்டத்தின் மூலம் தடை செய்வோம் – உள்துறை அமைச்சர் அமித்ஷா,’’ என்ற எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட நியூஸ் கார்டை பார்த்தாலே அது போலியாகச் சித்தரிக்கப்பட்ட ஒன்றுதான் என தோன்றுகிறது. இருந்தாலும், அதனை முதலில் fotoforensics.com இணையதளத்தில் பதிவேற்றி ஆய்வு செய்தோம். 

இதன்மூலமாக, மேற்கண்ட நியூஸ் கார்டில் எழுத்து, தேதி பகுதிகளில் டேம்பரிங் செய்துள்ளதாக, தெரியவருகிறது. இதையடுத்து, தந்தி டிவியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் (@ThanthiTV) சென்று, இதுபோல ஏதேனும் செய்தி வெளியிடப்பட்டுள்ளதா என விவரம் தேடினோம்.

அப்போது, பிப்ரவரி 4ம் தேதி அமித் ஷா பற்றி தந்தி டிவி வெளியிட்ட ஒரு நியூஸ் கார்டின் விவரம் கிடைத்தது. 

Thanthi TV News Link Archived Link 

எனவே, அமித் ஷா பற்றி தந்தி டிவி பிப்ரவரி 4ம் தேதி பகிர்ந்த ஒரு நியூஸ் கார்டை எடுத்து, தேதி மற்றும் அதில் உள்ள கன்டென்டை மாற்றி எழுதி, தவறான வதந்தியை நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாக தெரியவருகிறது. 

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:சமஸ்கிருதம் தவிர மற்ற மொழிகளில் அர்ச்சனை- தடை விதிப்போம் என்று அமித் ஷா கூறினாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False