
‘’கட்சியில் இருந்து விலக விரும்புவோர் விலகலாம்,’’ என்று டிடிவி தினகரன் கூறியதாக பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

ஆகஸ்ட் 23, 2020 அன்று பகிரப்பட்ட இந்த ஃபேஸ்புக் பதிவில், டிடிவி தினகரன் பற்றி ஜெயா பிளஸ் ஊடகம் வெளியிட்டதாகக் கூறி, ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர்.
அந்த நியூஸ் கார்டில், ‘’என்னால் உங்களுக்கு எந்த ஆதாயம் இல்லை என்று கருதினால் அஇஅதிமுகவில் சேர்ந்து விடுங்கள் என்னை கேள்வி கேட்டு தொந்தரவு செய்யாதீர்கள் கழக பொது செயலாளர் டி.டி.வி தினகரன் எம்எல்ஏ,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள நியூஸ் கார்டு உண்மையானதா என்பதில் சந்தேகமே உள்ளது. காரணம், அதில் உள்ள ஃபாண்ட் அளவு மாறுபாடு மற்றும் எந்த முற்றுப்புள்ளி, காற்புள்ளி எதுவுமின்றி எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன.

இதுபோல ஜெயா பிளஸ் ஊடகம் சமீபத்தில் செய்தி எதுவும் வெளியிட்டதா என்று தேடிப் பார்த்தோம். நீண்ட நேரம் தேடியும் இப்படியான செய்தி கிடைக்கவில்லை. அதற்குப் பதிலாக, வேறோரு செய்திதான் கிடைத்தது.
இதுதவிர, நாம் ஆய்வு செய்யும் நியூஸ் கார்டில் உள்ளது போல டிடிவி தினகரன் பேசியிருக்க வாய்ப்பில்லை. இதுபற்றி அவரது கட்சி தரப்பில் விசாரித்தபோது, ‘’இது போலியான செய்திதான். அமமுக ஐடி பிரிவு சார்பில் பலரும் இதனை போலி நியூஸ் கார்டு என குறிப்பிட்டு, ஏற்கனவே தகவல் பகிர்ந்துள்ளனர்,’’ என்றனர்.
இதை வைத்து தகவல் தேடியபோது, கடந்த 2019 முதலே இந்த போலி நியூஸ் கார்டு பரவி வருவதாக, தெரியவந்தது. எனவே, இது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட வதந்திதான் என்று உறுதியாகிறது. இதனை முதலில் உருவாக்கி பகிர்ந்தவர்கள் அதிமுக சார்பான நபர்கள் ஆவர். அவர்கள் உருவாக்கிய வதந்திதான் இன்றளவும் பரவி வருகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி 2019ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட போலி நியூஸ் கார்டு இன்றளவு பரவி வருவதாக, சந்தேகமின்றி தெளிவாகிறது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால் +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவியுங்கள்.
