
‘’கோவையில் விபச்சார விடுதி நடத்தியதால் அர்ஜூன் சம்பத் உறவினர் கணேசமூர்த்தி என்பவர் கைது,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

மேற்கண்ட தகவலை +91 9049044263 மற்றும் +919049053770 ஆகிய எண்களில் நமக்கு வாசகர்கள் தொடர்ச்சியாக அனுப்பி வைத்து, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதேபோல, கதிர் நியூஸ் லோகோவுடன் கூடிய செய்தி ஒன்றையும் சிலர் பகிர்கின்றனர்.

Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
மேற்கண்ட செய்திகள் போலியாக தயாரிக்கப்பட்டவை ஆகும். இப்படி எந்த செய்தியும் சமீபத்தில் ஊடகங்களில் வெளியாகவில்லை. இதுபற்றி நாம் அர்ஜூன் சம்பத் தரப்பிலும் விசாரித்து உறுதிப்படுத்தியுள்ளோம்.
இதுதவிர, கதிர் நியூஸ் மேற்கண்ட செய்தியை போலியானது என்று மறுத்துள்ளது.
இதுதவிர, 2020ம் ஆண்டில் இப்படி ஒரு ரெய்டு கோவையில் நடந்துள்ளது. அப்போது, சிலரை போலீசார் கைது செய்தும் உள்ளனர். அந்த ரெய்டின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணைத்தே மேற்கண்ட வகையில் போலியான நியூஸ் கார்டுகளை வித விதமாக பகிர்ந்து வருகின்றனர்.

எனவே, 2020ல் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை தொடர்புபடுத்தி, ஒரு போலியான நியூஸ் கார்டை தயாரித்து, வேண்டுமென்றே அர்ஜூன் சம்பத் பெயரை இணைத்து, வதந்தி பரப்பி வருகின்றனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:அர்ஜூன் சம்பத் சகோதரர் பாலியல் தொழில் செய்ததால் போலீசாரால் கைது செய்யப்பட்டாரா?
Fact Check By: Fact Crescendo TeamResult: False
