‘’வயநாடு பாதிப்புக்கு ரூ.2 கோடி நன்கொடை அளித்த விஜய்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’நிலச்சரிவு- நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம். கேரளா வயநாடு நிலச்சரிவு நிதியுதவியாக தன் சார்பாக 1 கோடியும் தமிழக வெற்றிக் கழகத்தில் சார்பாக 1 கோடியும் மொத்தமாக 2 கோடி வழங்கியுள்ளார் த வெ க தலைவர் - விஜய்’’ என்று எழுதப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை லோகோவுடன் உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

Claim Link l Archived Link

உண்மை அறிவோம்:

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30, 2024 அன்று கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக, முண்டகை, மேப்பாடி, சூரல்மலா போன்ற இடங்களில் நிலச்சரிவு நிகழ்ந்ததால், நாடு முழுவதும் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில், வயநாடு பாதிப்புகளுக்கு உதவும் வகையில் த.வெ.க., தலைவர் விஜய், ரூ.2 கோடி நன்கொடை அளித்ததாக, மேற்கண்டவாறு சிலர் தகவல் பரப்புகின்றனர். ஆனால், இது ஒரு போலியான நியூஸ் கார்டு.

இதுதொடர்பாக, புதிய தலைமுறை ஊடகம் மற்றும் த.வெ.க., தலைமைக்கழகம் ஆகியவற்றில் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.

மேலும், புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு வேறொன்றாகும்.

உண்மையான நியூஸ் கார்டையும், போலியான நியூஸ் கார்டையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு போலியான ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:வயநாடு பாதிப்புக்கு ரூ.2 கோடி நன்கொடை அளித்தாரா விஜய்?

Fact Check By: Fact Crescendo Team

Result: ALTERED