
‘’நேபாளம் நாட்டில் அல்லாவின் கருணையால் தானாகவே பறந்து சென்று மசூதி கட்டிடத்தின் மீது அமர்ந்த கோபுரம்,’’ என்று கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் ஆய்வு செய்ய தொடங்கினோம்.
பல ஆண்டுகளாகவே, சமூக வலைதளங்களில் இந்த தகவல் பகிரப்பட்டு வருவதையும் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோ முதலில் தெளிவின்றி உள்ளது. அதனால், அதில் எப்படி கோபுரம் தானாகவே பறக்கிறது என உறுதிப்படுத்த இயலவில்லை. எனவே, இதில் கூறப்படுவது போலவே, தானாகவே பறந்து சென்று மசூதியின் மீது அமர்ந்து கொண்டதா என்றே பலரும் நம்ப நேரிடுகிறது. உண்மையில், இது தவறான தகவலாகும்.
ஏனெனில், குறிப்பிட்ட மசூதியின் கோபுரம் ரோப் காரில் பயன்படுத்துவது போன்ற வலுவான கேபிள் பயன்படுத்தி, எடுத்துச் செல்லப்படுகிறது. கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.

இதில், கேபிள் போன்ற ஒன்றைக் காணலாம். ஒருவேளை இது மின்கம்பியாக இருக்குமோ என நினைத்தால், அதுவும் இல்லை. காரணம், அருகிலேயே மற்றொரு மின்கம்பம் உள்ளது. அதன் உயரத்திற்கும், இந்த கேபிள் கம்பிகள் இருக்கும் உயரத்திற்கும் தொடர்பில்லாமல் இருப்பதைக் காண முடிகிறது.

எனவே, ரோப் கார் சேவையில் பயன்படுத்தப்படுவதைப் போன்ற கேபிள்களை பயன்படுத்தி, இந்த கோபுரத்தை இழுத்துச் சென்று, மசூதியின் மீது பொருத்தியுள்ளனர் என தெளிவாகிறது.

ரோப் கார் மீது பொருத்தப்படுவதைப் போன்றே இந்த கோபுரத்தின் மீதும் பிடிமானங்கள் பொருத்தப்பட்டுள்ளதை ஓரளவு தெளிவாகவே உற்று பார்த்தால் உணரலாம்.

இந்த குழப்பத்திற்கு காரணம் இந்த வீடியோ எடுக்கப்பட்ட ஃபோனில் கேமிரா தரமானதாக இல்லை. தொலைவில் இருந்து குத்து மதிப்பாக எடுப்பதைப் போல இந்த காட்சிகளை கேமிரா பதிவு செய்துள்ளதால், பார்ப்பதற்கு கோபுரம் பறந்து செல்வதைப் போன்றே உள்ளது. இதனை பலரும் புரிந்துகொள்ளாமல், கோபுரம் தானாகவே பறந்து சென்று, மசூதி மீது அமர்ந்து கொண்டதாக, வதந்தி பரப்பி வருகின்றனர் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
இதுபற்றி ஏற்கனவே இணையதளம் ஒன்றில் 2010ம் ஆண்டிலேயே ஒப்பீடு செய்து, தெளிவாக விளக்கத்துடன் செய்தி வெளியிட்டுள்ளதையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:நேபாளத்தில் மசூதியின் கோபுரம் தானாகப் பறந்து சென்றதா?
Fact Check By: Pankaj IyerResult: False
