பொன்முடி இடத்தில் இருந்து ரூ.480 கோடி பறிமுதல் என்று பரவும் செய்தி உண்மையா?
‘’பொன்முடி இடத்தில் இருந்து ரூ.480 கோடி பறிமுதல்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
Facebook Claim Link l Archived Link
பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
திமுக மூத்த தலைவர் மற்றும் அமைச்சர் பொன்முடி வீடு, அவருக்குச் சொந்தமான அலுவலகம், இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தினர். இந்த விவகாரம் பெரிதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Puthiyathalaimurai link l tamil.indianexpress link
இந்த சூழலில், புதிய தலைமுறை லோகோவுடன் சிலர் மேற்கண்ட வகையில் செய்தி பரப்பி வருகின்றனர். எனவே, இச்செய்தி உண்மையா என்று விவரம் தேடினோம். ஆனால், இவ்வாறு எந்த செய்தியும் புதிய தலைமுறை ஊடகத்தின் சமூக வலைதள பக்கங்களில் காணவில்லை. இதைத்தொடர்ந்து, அவர்களது டிஜிட்டல் பிரிவு நிர்வாகியை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். ‘’இதனை நாங்கள் வெளியிடவில்லை,’’ என்று அவர் தெரிவித்தார்.
அடுத்தப்படியாக, அவர்கள் வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டை கீழே இணைத்துள்ளோம்.
இதனையும், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தியையும் ஒப்பீடு செய்து கீழே இணைத்துள்ளோம்.
இதன்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
Title:பொன்முடி இடத்தில் இருந்து ரூ.480 கோடி பறிமுதல் என்று பரவும் செய்தி உண்மையா?
Written By: Fact Crescendo TeamResult: Altered