FactCheck: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டதா?

இந்தியா | India கோவிட் 19 வர்த்தகம்

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

மத்திய நிதியமைச்ச செயலாளரின் கையெழுத்துடன் கூடிய செய்தியறிக்கை ஒன்றை வாசகர் ஒருவர் நமக்கு, வாட்ஸ்ஆப் சாட்போட் (+91 9049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார்.

இதனை மற்றவர்களும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கிலும் பகிர்வதைக் கண்டோம்.

Facebook Claim LinkArchived Link

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட செய்திக்குறிப்பில், ‘’மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி வரும் 2021 ஜூலை மாதம் முதல் மீண்டும் வழங்கப்படும். இதேபோல, 2020 மற்றும் 2021ம் ஆண்டிற்காக நிலுவையில் உள்ள அகவிலைப்படியும் மூன்று தவணைகளாக வழங்கப்படும்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனை ஒப்புதல் கூறி, இந்திய நிதித்துறை செயலாளர் டி.வி.சோமநாதன் கையெழுத்திட்டுள்ளார்.

எனவே, இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்று சமீப நாட்களாக, ஊடகங்களில் எதிர்பார்ப்பு தெரிவித்து, செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இதன் அடிப்படையிலேயே மேற்கண்ட செய்தியறிக்கை சுற்றில் விடப்பட்டுள்ளது. ஆனால், இது மத்திய நிதியமைச்சகம் பெயரில் பகிரப்படும் போலியான செய்தியறிக்கை.

இதனை நம்ப வேண்டாம் என்று கூறி, மத்திய நிதியமைச்சகமும் விளக்கம் அளித்துள்ளது.

Archived Link 

எனவே, குறிப்பிட்ட செய்தி போலியானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel

Avatar

Title:மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False