கும்பமேளாவுக்கு வந்த 154 வயதான துறவி என்று பரவும் வீடியோ உண்மையா?

Religion இந்தியா | India

பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பங்கேற்க வந்த 154 வயதான துறவி என்று வயதான துறவி ஒருவரின் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

வயதான துறவி ஒருவர் வழிபாட்டில் ஈடுபட்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இமயமலையில் இருந்து கும்ப மேளாவிற்கு வருகை புரிந்த 154 வயது துறவி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இது வரை அதிக நாட்கள் உயிர் வாழ்ந்தவர்கள் சாதனையே 122 ஆண்டுகள் தான். ஆனால், 154 வயதான துறவி ஒருவர் கும்பமேளாவுக்கு வந்தார் என்று பரவும் தகவல் ஆச்சரியத்தை அளித்தது. இதற்கு முன்பு கூட இப்படி நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வாழும் துறவி என்று வதந்திகள் பரப்பப்பட்டன. எனவே, இந்த தகவல் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.

Instagram

வீடியோ காட்சியைப் புகைப்படமாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது சில மாதங்களாக இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. மகா கும்பமேளா 2025 ஜனவரி 14ம் தேதி தொடங்கியது. ஆனால், 2024ம் ஆண்டிலேயே இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வந்திருப்பதன் மூலம் இது கும்பமேளாவுக்கு வந்த வீடியோ இல்லை என்பது தெளிவானது.

Archive

யார் இந்த சாமியார் என்று அறிய தொடர்ந்து தேடினோம். அப்போது, 2024ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி எக்ஸ் தளத்தில் இந்த வீடியோவை பதிவிட்டு சியாராம் பாபா (Siyaram Baba) மரணம் அடைந்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் கூகுளில் சியாராம் பாபா என்று டைப் செய்து தேடிய போது பல செய்திகள் நமக்குக் கிடைத்தன.

உண்மைப் பதிவைக் காண: livemint.com I Archive

அதில், மத்தியப் பிரதேச மாநிலம் பட்டியான் கிராமத்தில் நர்மதா கரையோரம் ஆசிரமம் வைத்திருந்த ஆன்மிக குரு சாந்த் சியாராம் பாபா தன்னுடைய 94வது வயதில் காலமானார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

சில மாதங்களுக்கு முன்பு குகையில் இருந்து வந்த சாமியார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. அந்த சாமியாரும், இவரும் ஒன்றா என்று அறிய ஆய்வைத் தொடர்ந்தோம். நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் வெளியான கட்டுரையை தேடி எடுத்தோம். 188 வயது சாமியார் என்று அப்போது வதந்தி பரவியிருந்ததும், அது தொடர்பாக ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் ஃபேக்ட் செக் கட்டுரை வௌியாகி இருப்பதும் தெரிந்தது. அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

இதன் மூலம் 2024ம் ஆண்டு டிசம்பரில் காலமான துறவி ஒருவரின் வீடியோவை எடுத்து 154 வயதான துறவி கும்பமேளாவில் பங்கேற்க வந்தார் என்று தவறாகப் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2024 டிசம்பரில் காலமான துறவி ஒருவரின் வீடியோவை எடுத்து கும்பமேளாவில் பங்கேற்க வந்த 154 வயது துறவி என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:கும்பமேளாவுக்கு வந்த 154 வயதான துறவி என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False