மக்களின் பேராசையே பெட்ரோல் விலை உயர காரணம் என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

‘’பொதுமக்கள் பேராசையில் அதிக வாகனம் வாங்குவதே பெட்ரோல் விலை உயர காரணம் என்று நிர்மலா சீதாராமன் கருத்து,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

Twitter Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த விலை உயர்வு வாழ்வாதாரத்தை பாதிக்கச் செய்வதாக, நடுத்தர மக்கள் பெரிதும் கவலை தெரிவிக்கின்றனர். ஆனால், விலையை குறைக்க மத்திய அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் இருப்பது வேதனை அளிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

NDTV Link I Economic Times Link

இந்த சூழலில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கண்ட வகையில் கருத்து தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்படுகிறது. ஆனால், இது உண்மையா என்று பார்த்தால், நிர்மலா பெயரில் பகிரப்படும் போலியான செய்தி என்பதே பதிலாகும். ஆம். இதுபற்றி நியூஸ் 7 தமிழ் ஊடகமும் மறுப்பு வெளியிட்டுள்ளது.

எனவே, நியூஸ் 7 தமிழ் வெளியிடாத செய்தியை, அவர்களது லோகோ பயன்படுத்தி போலியாக தயாரித்து, சமூக வலைதளங்களில் சிலர் பகிர்ந்து வருகிறார்கள் என தெளிவாகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:மக்களின் பேராசையே பெட்ரோல் விலை உயர காரணம் என்று நிர்மலா சீதாராமன் கூறினாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False