தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் நிரந்தரமாகக் குடியேற வழி செய்ய வேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

வட இந்தியர்கள் கடும் உழைப்பாளிகள், அவர்கள் இங்கேயே நிரந்தரமாகக் குடியேற வழி செய்ய வேண்டும் என்று பாஜக மகளிர் அணி தேசிய தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் புகைப்படத்துடன் கூடிய ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “வடநாட்டவர் கடும் உழைப்பாளிகள். தமிழர்கள் உழைக்காமல் இலவசங்களை எதிர்பார்த்து கையேந்தி நிற்கின்ற அவலமான காலகட்டத்தில் தமிழகத்திற்கான உழைப்புத் தேவையை நிறைவேற்றுபவர்கள் வடநாட்டவர்தான். அவர்களுக்கு வாக்குரிமை அளித்து அவர்களை இங்கேயே நிரந்தரமாக குடியேற்ற வழி செய்யவேண்டும் – வானதி சீனிவாசன், பாஜக எம்.எல்.ஏ” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த Raja Panjabi Kesan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 மார்ச் 8ம் தேதி பதிவிட்டுள்ளார். இதைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் குறிப்பாக பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும் அவர்கள் கொலை செய்யப்படுவதாகவும் வட இந்தியாவில் வதந்தி பரவியது. இந்தியாவின் பல பகுதிகளில் நடந்த கொலைகளின் வீடியோக்களை எல்லாம் எடுத்து தமிழ்நாட்டில் நடந்தது என்று குறிப்பிட்ட சிலரால் திட்டமிட்டு வதந்தி பரப்பப்பட்டது. இந்த நிலையில் வட மாநிலத் தொழிலாளர்கள் கடும் உழைப்பாளிகள், அவர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை அளித்து, அவர்கள் நிரந்தமாகக் குடியேற வழி செய்ய வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ வானதி கூறியதாக சமூக ஊடகங்களில் நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது.

இந்த நியூஸ் கார்டின் வடிவமைப்பு, தமிழ் ஃபாண்ட் வழக்கமாக ஜூனியர் விகடன் வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போல இல்லை. எனவே, இது போலியானது என்று தெளிவாகத் தெரிந்தது. இருப்பினும் அதை உறுதி செய்வதற்கான ஆதாரங்களைத் தேடினோம். முதலில் இப்படி ஏதும் நியூஸ் கார்டை ஜூனியர் விகடன் வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தை பார்வையிட்டோம். 

உண்மைப் பதிவைக் காண: Facebook

கடந்த மார்ச் 4ம் தேதி வானதி சீனிவாசன் புகைப்படத்துடன் ஒரு நியூஸ் கார்டை ஜூனியர் விகடன் வெளியிட்டிருப்பது தெரிந்தது. ஆனால் அதில், “வெறுப்பை விதைப்பவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்க! வட மாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை விதைக்கும் அமைப்புகள், அதன் தலைவர்கள், தனி மனிதர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு சட்டம் போன்ற கடுமையான சட்டங்களில் அவர்களை கைது செய்ய வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சிக்காக உழைக்கும் தொழிலாளர்கள், யாராக இருந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. அதனை முதலமைச்சர் உறுதிப்படுத்த வேண்டு! – வானதி சீனிவாசன், பாஜக எம்.எல்.ஏ!” என்று இருந்து. இந்த நியூஸ் கார்டை எடுத்து தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது தெரிந்தது.

இதை உறுதி செய்துகொள்ள ஜூனியர் விகடன் டிஜிட்டல் பொறுப்பாளருக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பி இது உண்மையா என்று கேட்டோம். அவரும் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று நம்மிடம் உறுதி செய்தார்.

வானதி சீனிவாசன் இப்படி ஏதாவது கருத்தை தெரிவித்துள்ளாரா என்று தேடிப் பார்த்தோம். ஆனால், அவர் அப்படிக் கூறியதாக எந்த செய்தியும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்தது தெரிந்தது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில், “வடநாட்டவர் கடும் உழைப்பாளிகள்” என்று வானதி சீனிவாசன் பெயரில் பரவும் நியூஸ் கார்டு போலியானது என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் பலரின் வீடியோ, ஆடியோக்கள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையிடம் உள்ளது என்று சிடிஆர் நிர்மல் கூறியதாக பரவும் நியூஸ் கார்டுகள் போலியானவை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் நிரந்தரமாகக் குடியேற வழி செய்ய வேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False