
‘’ பாஜக.,வை விட்டு விலகி, நாய் வளர்க்கச் செல்கிறேன்,’’ என்று எஸ்.ஜி.சூர்யா கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் சிலர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
Claim Tweet Link l Archived Link
பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்த செய்தியை படிக்கும்போதே இவ்வாறு சூர்யா பேசியிருக்க வாய்ப்பில்லை என்று தெளிவாக தெரிகிறது. ஏனெனில், கதிர் நியூஸ் ஊடகத்தை நடத்துவதே அவர்தான். பாஜக நிர்வாகிகள் சமீபகாலமாக, கட்சியில் இருந்து விலகி வரும் சூழலில், அண்ணாமலையுடன் ஒன்றாக அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பியதால், எஸ்ஜிசூர்யாவை கேலி செய்யும் நோக்கில் இவ்வாறு வேண்டுமென்றே பழைய புகைப்படம் ஒன்றை வைத்து, போலியாக செய்தி தயாரித்து, பகிரப்படுகிறது.
இதுபற்றி கதிர் நியூஸ் மற்றும் எஸ்ஜிசூர்யா தரப்பில் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.
எனவே, பாஜக தமிழ்நாடு நிர்வாகிகளை கேலி செய்யும் நோக்கில், சிலர் தயாரித்த போலியான செய்திதான் மேற்கண்ட ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:நாய் வளர்க்கச் செல்கிறேன் என்று எஸ்.ஜி.சூர்யா கூறினாரா?
Fact Check By: Fact Crescendo TeamResult: False
