
‘’சென்னை பூந்தமல்லியில் புயல் காற்றில் பறந்து வந்து விழுந்த தகரம்,’’ எனக் கூறி சமக வலைதளங்களில் பகிரப்படும் வைரல் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link 1 | Archived Link 1 |
Facebook Claim Link 2 | Archived Link 2 |
Facebook Claim Link 3 | Archived Link 3 |
இதில், மழை நேரத்தில் சாலையில் வாகனங்கள் செல்வதையும், அதன் பின் பாதசாரிகள் மேலே தகரம் ஒன்று பறந்து வந்து விழுவது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதனைப் பலரும் சமீபத்தில் சென்னையில் நிகழ்ந்த நிவர் புயல் பாதிப்புடன் ஒப்பிட்டு பகிர்ந்து வருவதால், இதன் நம்பகத்தன்மை பற்றி தகவல் தேடினோம்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட புகைப்படத்தில் செல்லும் வாகனங்கள், சாலையின் தோற்றம் உள்ளிட்டவற்றை வைத்து பார்த்தால், சென்னை போல தோன்றவில்லை. ஏனெனில், சென்னை பூந்தமல்லி மிகவும் நெரிசலான கட்டிடங்கள் நிறைந்த பகுதியாகும்.
இதுதவிர சென்னையில் மழை பெய்தால் சாலைகளில் நிச்சயமாக மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவது வழக்கம். அப்படி இந்த வீடியோவில் எதுவும் இல்லை.
எனவே, சந்தேகத்தின் பேரில், இந்த வீடியோவின் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இது பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் நிகழ்ந்த சாலை விபத்து ஒன்று தொடர்பானது என விவரம் தெரியவந்தது.
இதுபற்றி பாகிஸ்தான் ஊடகம் ஒன்றில் வெளியிடப்பட்ட செய்தியின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

சரியாகச் சொன்னால், பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள Avari Hotel பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இதுதொடர்பான செய்தி, வீடியோ காட்சிகள் இணையத்தில் ஆகஸ்ட், 2020 முதலாகக் காணக் கிடைக்கிறது. எனவே, இது கராச்சியில் மழை பெய்த போது நிகழ்ந்த சம்பவம்தான் என்று தெளிவாகிறது.
தெளிவான வீடியோ காட்சி மற்றும் இதர செய்தி லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
எனவே, கராச்சியில் நிகழ்ந்த மழை நேர விபத்து பற்றிய வீடியோவை எடுத்து, சென்னை பூந்தமல்லியில் நிகழ்ந்ததைப் போல தவறாகச் சித்தரித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி வருகிறார்கள் என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:சென்னை பூந்தமல்லியில் புயல் காற்றில் தகரம் பறந்து விழுந்தது என்று பரவும் வீடியா!
Fact Check By: Pankaj IyerResult: False
