‘லடாக்கை குத்தகைக்கு விட்டுள்ளோம்’ என்று மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கூறினாரா?   

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

‘‘சீனாவுக்கு லடாக் மற்றும் அருணாச்சல் பகுதிகளை குத்தகை விட்டுள்ளோம்’ என்று மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’சீனா ஆக்கிரமிப்பு செய்யவில்லை! யூனியன் பிரதேசமான லடாக்கில் 38,000 சதுர கி.மீ. பகுதியையும், அருணாச்சலப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் 90,000 சதுர கி.மீ பகுதியையும் சீன அரசுக்கு குத்தகைக்கு விட்டிருக்கிறோம். ஆக்கிரமிப்பு என எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்புவது கண்டனத்திற்குரியது! சட்டம், நீதித்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link l Archived Link 

ஜூனியர் விகடன் லோகோ உள்ளதால், இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

லடாக், அருணாச்சலப் பிரதேசம் போன்ற இந்தியாவுக்குச் சொந்தமான பகுதிகளை அண்டை நாடான சீனா உரிமை கொண்டாடி வருகிறது. மேலும், இந்த பகுதிகளைச் சேர்ந்த சில இடங்களுக்கு சீன மொழியில் பெயர் வைத்திருப்பதாகவும் சமீபத்தில் செய்தி வெளியாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Puthiyathalaimurai Link l The Hindu Link 

இந்த விவகாரம் தொடர்பாக சட்டம், நீதித்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பதில் அளித்துள்ளதைப் போன்று மேற்கண்ட வகையில் சிலர் தகவல் பரப்புகின்றனர். 

ஆனால், அவர் இவ்வாறு பேசியதாக, செய்தி எதுவும் காண கிடைக்கவில்லை. 

அடுத்தப்படியாக, ஜூனியர் விகடன் லோகோ உள்ளதால், அவர்களது ஆசிரியர் குழுவை தொடர்புகொண்டு, இது உண்மையா என்று விவரம் கேட்டோம். ‘’இதனை நாங்கள் வெளியிடவில்லை. இது எங்களது பெயரில் பகிரப்படும் போலியான நியூஸ் கார்டு,’’ என்று அவர்கள் தெரிவித்தனர். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டை ஜூனியர் விகடன் வெளியிடவில்லை, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘லடாக்கை குத்தகைக்கு விட்டுள்ளோம்’ என்று மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கூறினாரா?   

Written By: Fact Crescendo Team 

Result: False