
‘’போலீஸ் விசாரணைக்கு எதிராக ஈபிஎஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட நியூஸ் கார்டை மாலைமலர் ஊடகம் வெளியிட்டதா என்று தகவல் தேடினோம். ஆனால், இதுபோல எந்த செய்தியும் காணக் கிடைக்கவில்லை. இதுபற்றி அந்த ஊடகத்தின் ஆசிரியர் குழுவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். அப்போது, ‘’இது எங்களது பெயரில் பரவும் வதந்தி, உண்மையான செய்தி லிங்க் இதோ,’’ என்று கூறி ஒரு லிங்க் கொடுத்தனர். அதனைக் கீழே இணைத்துள்ளோம்.
எனவே, உண்மையான செய்தி வேறொன்றாக இருக்க, அதனை எடிட் செய்து, தவறான தகவல் பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

கூடுதல் ஆதாரத்திற்காக நாம் அதிமுக ஐடி பிரிவு தரப்பிலும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:போலீஸ் விசாரணைக்கு எதிராக ஈபிஎஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததா?
Written By: Fact Crescendo TeamResult: ALTERED
