அதிமுக மகளிர் அணியினரை தரையில் சாப்பிட வைத்த எடப்பாடி பழனிசாமி என்று பகிரப்படும் வதந்தி…

‘’ அதிமுக மகளிர் அணியினருக்கு தரையில் சோறு போட்ட எடப்பாடி பழனிசாமி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Tweet Claim Link l Archived Link  இந்த ட்வீட்டில் பகிரப்பட்டுள்ள கமெண்ட்கள் சிலவற்றையும் கீழே இணைத்துள்ளோம்.  உண்மை அறிவோம்: சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி […]

Continue Reading

அ.தி.மு.க பேரணியில் பங்கேற்ற வட இந்தியத் தொழிலாளர்கள் என்று பரவும் படம் உண்மையா?

விஷச் சாராய சாவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கா அதிமுக சார்பில் நடத்தப்பட்ட பேரணியில் வட மாநிலத் தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டார்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வட இந்தியர்கள் போல தோற்றம் கொண்ட சிலர் அ.தி.மு.க கொடியுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “1-1/2கோடிதொண்டர்கள் யாரும் வரலயா😩 எடப்பாடி இன்று நடத்திய பேரணியில் வடமாநில […]

Continue Reading

பேரணி என்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்யும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

பேரணி என்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்யும், சிலருக்கு மயக்கம் வரத்தான் செய்யும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பேரணி என்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படத்தான் செய்யும். கடும் வெயிலில் ஒரு சிலருக்கு மயக்கம் வரத்தான் செய்யும். அதிமுக பேரணியால் ஏற்பட்ட போக்குவரத்து நொிசல் காரணமாக […]

Continue Reading

எம்.ஜி.ஆர் காலத்திலேயே சாராயம் காய்ச்சினேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

எம்.ஜி.ஆர் காலத்திலேயே சாராயம் காய்ச்சியவன் நான் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய வாசகர் ஒருவர் புதியதலைமுறை வெளியிட்டது போன்று உள்ள நியூஸ் கார்டை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில், “எடப்பாடி பழனிசாமி சவால் புரட்சித் தலைவர் காலத்திலேயே சாராயம் காய்ச்சியவன் நான். ஆனால் அந்த சாராயத்தால் ஒருவருக்காவது சின்ன பாதிப்பு ஏற்பட்டது என்பதை யாராவது […]

Continue Reading

‘எடப்பாடியாராக மாறிய கிங் கோலி’ என்று சன் நியூஸ் செய்தி வெளியிட்டதா?

‘‘‘எடப்பாடியாராக மாறிய கிங் கோலி’’, என்று சன் நியூஸ் வெளியிட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  FB Claim Link l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: சமீபத்தில் குழந்தைகள் விளையாடுவதைப் போல சில […]

Continue Reading

கொடநாடு என்று கூறியதும் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினாரா எடப்பாடி பழனிசாமி?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொடநாடு பற்றிப் பேசத் தொடங்கியதும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்தார் என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக தற்காலிக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அணியினர் அவையிலிருந்து வெளியேறுகின்றனர். முதலமைச்சர் பேசும் […]

Continue Reading

தமிழ்நாடு பெயர் விவகாரம்; ஆளுநர் ரவிக்கு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்தாரா?

‘’அறிஞர் அண்ணாவை சீண்டினால், சந்திரலேகாவுக்கு ஏற்பட்ட நிலைதான் ஆளுநர் ரவிக்கும் ஏற்படும்,’’ என்று எடப்பாடி பழனிசாமி பேசியதாகக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வேகமாகப் பரவுகிறது. இதுபற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Tweet Claim Link l Archived Link இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் காண முடிகிறது. உண்மை அறிவோம்: ‘தமிழ்நாடு என்பதை தமிழகம் என்றே அழைக்கலாம்’ என்று ஆளுநர் ரவி கருத்து கூறியிருந்தார். இதனை பலரும் சமூக […]

Continue Reading

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ரூ.1 லட்சம் திருட்டு- நியூஸ் 7 தமிழ் பெயரில் பரவும் செய்தி உண்மையா?

‘’அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ரூ.1 லட்சம் திருட்டு,’’ என்று பரவும் ஒரு செய்தி பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: நியூஸ் 7 தமிழ் லோகோவுடன் பகிரப்படும் மேற்கண்ட நியூஸ் கார்டை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே (9049044263) நமக்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதனை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கில் பகிர்வதைக் கண்டோம்.  Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: சமீபத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் […]

Continue Reading

மோடி எங்களை உள்ளே விடவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

பிரதமர் மோடி எங்களை உள்ளே விடவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாகக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:சமீபத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லி சென்றிருந்தார். அப்போது, தந்தி டிவி வெளியிட்ட செய்தி விவரம் கீழே தரப்பட்டுள்ளது. இந்த நியூஸ்கார்டை எடிட் செய்து, மோடி எங்களை உள்ளே விடவில்லை, அதனால், அவரை சந்திக்க முடியவில்ல […]

Continue Reading

அதிமுக.,வின் கடைசி முதலமைச்சர் நான்தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

‘’அதிமுக சார்பாக, தமிழகத்தை ஆட்சி செய்த கடைசி முதலமைச்சர் நான்தான்,’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாகக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link இதனை பலரும் உண்மை என நம்பி ட்விட்டர் மட்டுமின்றி ஃபேஸ்புக்கிலும் பகிர்வதைக் காண முடிகிறது. உண்மை அறிவோம்:சமீபத்தில், 44th Chess Olympiad சென்னை மாநகரில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே விமரிசையாக நடைபெற்றது. இதனை […]

Continue Reading

ஓபிஎஸ் கூட்டத்தின் குலத்தொழில் திருடுவது என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

திருடுவதுதான் ஓ.பன்னீர்செல்வம் சார்ந்த சமூகத்தினரின் குலத்தொழில் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக, ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: FB Claim Link I Archived Link உண்மை அறிவோம்: ஜெயலலிதா மரணமடைந்த நிலையில், சசிகலாவை வெளியேற்றி விட்டு, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒன்றிணைந்து, 4 ஆண்டுகள் அதிமுக.,வை தலைமையேற்று, தமிழ்நாட்டில் ஆட்சி நடத்தி வந்தனர்.  Fact Crescendo Tamil Link கடந்த […]

Continue Reading

அண்ணாமலைதான் அடுத்த தலைவர் என்று அதிமுக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டதா?

‘’அண்ணாமலைதான் அடுத்த தலைவர் என்று அதிமுக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டதால் அடிதடி,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Linkஉண்மை அறிவோம்:அதிமுக.,வின் புதிய தலைமை யார் என்பது தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகியோரிடையே மோதல் வெடித்துள்ளது. இதையொட்டி நாள்தோறும் தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பு காட்சிகள் அரங்கேறி வரும் சூழலில், அதிமுக பொதுக்குழுவில், அண்ணாமலைதான் அடுத்த தலைவர் […]

Continue Reading

தாமரை சின்னத்தில் கூட போட்டியிட தயார் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

‘’தாமரை சின்னத்தில் கூட போட்டியிட தயார்,’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாகக் குறிப்பிட்டு ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (+91 9049044263, +91 9049053770) அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் பலர் இதனை உண்மை போல பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:அஇஅதிமுக.,வின் […]

Continue Reading

ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் கட்சியில் இருந்து நீக்குகிறேன் என்று சசிகலா அறிவித்தாரா?

அதிமுக-வில் இருந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை நீக்குவதாக, சசிகலா அறிவித்தார் என்று கூறி ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வி.கே.சசிகலா புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை வெளியிட்டது போன் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “EPS,OPS இருவரும் அஇஅதிமுக தலைமைக்கழக அலுவலகத்தில் வன்முறையைத் தூண்டியுள்ளனர். எனவே அவர்கள் இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து […]

Continue Reading

ஊழல் வழக்கில் தண்டனை; ஜெயலலிதா நிரந்தர பொதுச் செயலாளர் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

‘’ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் ஜெயலலிதா. அவர் நிரந்தர பொதுச் செயலாளராக இனி இருக்க முடியாது,’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டார். பலரும் இதனை உண்மை என நம்பி சமூக வலைதளங்களில் ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link […]

Continue Reading

அதிமுக பொதுச் செயலாளருக்கு மேல்வரிசைப் பற்கள் 1 இன்ச் நீளம் இருக்க வேண்டும் என்று பகிரப்படும் வதந்தி…

‘’அதிமுக பொதுச் செயலாளருக்கு முன்வரிசைப் பற்கள் 1 இன்ச் நீளம் குறையாமல் இருக்க வேண்டும் என்று அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே அதிமுக பொதுக்குழுவில், புதிய தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அத்துடன், அவரது எதிர் கோஷ்டியான ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் […]

Continue Reading

என் காலில் விழுந்த நாய் ஒன்று கட்சியை கவ்விச் சென்றுவிட்டது என்று சசிகலா கூறினாரா?

‘’என் காலில் விழுந்து பதவி பெற்ற நாய் ஒன்று கட்சியை கவ்விச் சென்றுவிட்டது,’’ என்று சசிகலா கூறியதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி வைத்த இந்த நியூஸ் கார்டை பலரும் உண்மை என நம்பி, ஷேர் செய்து வருவதைக் காண முடிகிறது. Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:அஇஅதிமுக.,வில் தற்போது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் […]

Continue Reading

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவினருக்கு சவால் விடுத்தாரா?

‘’பாஜக.,வினர் என் வீட்டுக்கு வந்தால் அதிமுக.,வின் ஆண்மையை நிரூபிக்கிறேன்,’’ என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சவால் விட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Lin இதனை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:‘’தமிழ்நாட்டில் தற்போது ஆளுங்கட்சியாக உள்ள திமுக.,வை சட்டமன்றத்தில் எதிர்த்துப் பேசக் கூட எதிர்க்கட்சியான அதிமுக உறுப்பினர்கள் தயங்குகிறார்கள், ஆண்மையுடன் செயல்படுவதில்லை,’’ […]

Continue Reading

எடப்பாடி பழனிசாமி, அன்பில் மகேஸ், சக்கரபாணி, டி.ஆர்.பாலு பெயரில் பரவும் போலி நியூஸ் கார்டுகள்!

தேவைப்பட்டால் கொரோனா காலத்தில் மருத்துவமனைகளை சுத்தம் செய்யும் பணியில் ஆசிரியர்களைப் பயன்படுத்துவோம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதே போன்று எடப்பாடி பழனிசாமி, டி.ஆர்.பாலு, அமைச்சர் சக்கரபாணி பெயரிலும் போலியான நியூஸ் கார்டுகள் பகிரப்பட்டு வருகின்றன. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. […]

Continue Reading

அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்தாரா எடப்பாடி பழனிசாமி?

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜக கண்டனம் – ஈபிஎஸ் எதிர்ப்பு. எல்.கே.ஜி குழந்தைகளை மிரட்டும் செயலை அதிமுக மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது. […]

Continue Reading

எடப்பாடி பழனிசாமி கையில் இருப்பது என்ன? போலியான செய்தியால் சர்ச்சை…

பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட வெல்லத்தை உண்டு தனக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டதை பாலிதீன் பையில் கொண்டு வந்தது எடப்பாடி பழனிசாமி காட்டினார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பொங்கல் தொகுப்பு பொருட்கள் சரியில்லை: ஈபிஎஸ். வெல்லத்தை உண்டு தனக்கு […]

Continue Reading

FACT CHECK: அதிமுக தோல்விக்குத் தகுதியற்ற தலைமைதான் காரணம் என்று சி.வி.சண்முகம் கூறினாரா?

அதிமுக தோல்விக்குத் தகுதியற்ற தலைமைதான் காரணம் என்று சி.வி.சண்முகம் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஏபிபி நாடு வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தல்களில் தொடர்ச்சியாக அஇஅதிமுக என்கிற பேரியக்கம் படுதோல்வி அடைந்திருப்பதற்கு தகுதியற்ற தலைமையே காரணம் – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்” […]

Continue Reading

FACT CHECK: ஜெயலலிதா ஊழல்களை என் தலையில் கட்டுகிறது தி.மு.க என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

ஜெயலலிதா ஆட்சியில் நடந்த ஊழல்களை எல்லாம் என் தலையில் கட்ட பார்க்கிறது தி.மு.க அரசு என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “கடந்த பத்து வருடங்களில் 4 வருடங்கள் மட்டுமே […]

Continue Reading

FACT CHECK: எடப்பாடி பழனிசாமி மன நலம் பாதித்தது போல நடிக்கிறார் என்று நடிகர் மயில்சாமி கூறினாரா?

கொடநாடு கொலை வழக்கிலிருந்து தப்பிக்க மனநலம் பாதிக்கப்பட்டது போல் நடிக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று நடிகர் மயில்சாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நடிகர் மயில்சாமி ஆகியோர் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கொடநாடு கொலை வழக்கிலிருந்து தப்பிக்க மனநலம் பாதிக்கப்பட்டது போல் நடிக்கிறார் […]

Continue Reading

FACT CHECK: நீட் விலக்கு தீர்மானத்தை கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்ததா?

நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை கண்டித்து அ.தி.மு.க வெளிநடப்பு செய்தது என்று சில பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நேற்று, இரண்டு என இரண்டு புகைப்படங்களை ஒன்று சேர்த்துப் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “நேற்று பகுதியில், “மாணவன் தனுஷ் நீட் தேர்வால் தற்கொலை செய்ததற்கு திமுக தான் காரணம்” என்றும் இன்று பகுதியில் “நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை கண்டித்து […]

Continue Reading

FACT CHECK: கொடநாடு வழக்கு விசாரணையை நிறுத்தினால் நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவு என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

கொடநாடு கொலை வழக்கு விசாரணையை நிறுத்தினால் நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவு அளிக்கத் தயார் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார் என்று ஒரு நியூஸ் சார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கொடநாடு கொலை வழக்கு […]

Continue Reading

FactCheck: தனுஷ் தற்கொலை விவகாரம்; எடப்பாடி பழனிசாமி பற்றி நியூஸ்7 தமிழ் இந்த செய்தியை வெளியிடவில்லை!

‘’தனுஷ் தற்கொலை செய்துகொண்டதற்கு நேரில் அஞ்சலி செலுத்த சென்ற எடப்பாடி பழனிசாமியை உறவினர்கள் சூழ்ந்து கோஷமிட்டதால் பரபரப்பு,’’ என்று கூறி நியூஸ்7 தமிழ் லோகோவுடன் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு +919049053770 அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, பலரும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இதனை வைரலாக ஷேர் செய்வதைக் […]

Continue Reading

FACT CHECK: மோடி ஆட்சி இருக்கும் வரை எங்களை கைது செய்ய முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

மத்தியில் மோடி ஆட்சி இருக்கும் வரை திமுகவால் எங்களை ஊழல் வழக்கிலோ கொலை வழக்கிலோ கைது செய்ய முடியாது என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதில், “மத்தியில் மோடிஜி ஆட்சி […]

Continue Reading

FACT CHECK: எடப்பாடி பழனிசாமி அரசு வீட்டை காலி செய்ய மறுப்பது அழகல்ல என்று ஸ்டாலின் கூறினாரா?

முதல்வர் பதவியை விட்டு மக்கள் துரத்திய பின்னும் அரசு வீட்டை காலி செய்ய மறுப்பது பழனிசாமிக்கு அழகல்ல என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  அசல் பதிவைக் காண: Facebook I Archive முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை பிரேக்கிங் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “முதல்வர் பதவியை விட்டு மக்கள் துரத்திய பின்னும் அரசு […]

Continue Reading

FACT CHECK: பினராயி விஜயன் வாக்களித்த பள்ளியின் லட்சணம் என்று பரவும் படம் தற்போது எடுத்தது இல்லை!

பினராயி விஜயன் வாக்களித்த பள்ளியின் லட்சணம் என்றும் ஒரு பள்ளியின் படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த பதிவை பலரும் ஷேர் செய்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் வாக்களித்த படங்களை ஒப்பிட்டு ஒரே படமாக பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எடப்பாடியார் வாக்களித்த அவர் கிராமத்தின் சிலுவம்பாளையம் அரசுத் […]

Continue Reading

முக்குலத்தோர் ஓட்டு தேவையில்லை என்று அஇஅதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா கூறினாரா?

‘’முக்குலத்தோர் ஓட்டு தேவையில்லை என்று அஇஅதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா கருத்து,’’ என்று கூறி பகிரப்பட்டு வரும் நியூஸ் கார்டு ஒன்றை சமூக வலைதளங்களின் வழியே கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், தந்தி டிவி லோகோவுடன் ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், ‘’அதிமுகவிற்கு பக்கபலமாக இருக்கும் ஒரே காரணத்திற்காக வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. தங்களுக்கு […]

Continue Reading

FACT CHECK: ஒன்றுமில்லாத பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை பெரிதாக்கும் தி.மு.க என்று முதல்வர் பழனிசாமி கூறினாரா?

ஒன்றுமில்லாத பொள்ளாச்சி பாலியல் பிரச்னையை தி.மு.க ஊதி பெரிதாக்குகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive முதலமைச்சர் பழனிசாமி படத்துடன் கூடிய நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்! பொள்ளாச்சி மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதுமே பெண்களுக்கு பாதுகாப்பானதுதான். ஒன்றுமில்லாத பிரச்சினையை திமுக ஊதி பெரிதாக்குகிறது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.  நிலைத் […]

Continue Reading

FACT CHECK: ஊர்க்காவல் படையினருக்கு பணி நிரந்தரம், மாதம் ரூ.16,500 சம்பளம் அறிவித்தாரா எடப்பாடி பழனிசாமி?

ஊர்க் காவல் படை வீரர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் மாதம் ரூ.16,500 வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறையின் இரண்டு நியூஸ் கார்டுகள் பகிரப்பட்டுள்ளன. அதில், “ஊர் காவல் படை வீரர்களுக்கு மாதம் முழுவதும் பணி நிரந்தரம். மாதம் ரூ.16,500 சம்பளம் […]

Continue Reading

FactCheck: எடப்பாடி பழனிசாமி பினாமி செய்யாதுரை வீட்டில் எடுத்த புகைப்படங்களா?- உண்மை இதோ!

‘’எடப்பாடி பழனிசாமி பினாமி செய்யாதுரை வீட்டில் சோதனை நடத்தியபோது கிடைத்த பணம், தங்கம்,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படங்கள் சிலவற்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link கடந்த 2018 ஜூலை 21 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’ எடப்பாடி_பழனிசாமியின் #பினாமி #செய்யாதுரை வீட்டில் கட்டி கட்டியாக நூறு கிலோ தங்கமும்,கரன்சி கட்டுகளும் தோண்ட தோண்ட அலிபாபா குகையில் இருந்து […]

Continue Reading

FACT CHECK: அ.தி.மு.க நல்லாட்சி வழங்கியது என்று புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?

அ.தி.மு.க நல்லாட்சி வழங்கிய அரசு, என்று புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு முடிவு வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறையில் வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகள் ஸ்கிரீன்ஷாட்கள் பகிரப்பட்டுள்ளது. அதில், எல்லா விதத்திலும் அ.தி.மு.க முன்னிலை பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த பதிவை Knr Sivara என்பவர் 2021 மார்ச் 3ம் தேதி வெளியிட்டுள்ளார். இந்த […]

Continue Reading

FACT CHECK: பெட்டிக் கடை பாக்கி தள்ளுபடி என அறிவிப்பு!– நையாண்டி என்று கூட தெரியாமல் பரவும் போலிச் செய்தி!

பெட்டிக் கடையில் வைத்திருந்த டீ, வடை, சிகரெட் பாக்கி தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததாக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்வோம் என்று அதே அறிவிப்பை மு.க.ஸ்டாலின் வெளியிட்டதாக போலியான நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. உண்மை அறிவோம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive I Archive 2 முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டு வருகிறது. அதில், […]

Continue Reading

FACT CHECK: முக்குலத்தோர் தயவு இல்லாமல் ஆட்சியமைக்க முடியும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

முக்குலத்தோர் தயவு இல்லாமல் என்னால் ஆட்சிக்கட்டிலில் அமர முடியும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், “முக்குலத்தோர் தயவு இல்லாமல் என்னால் ஆட்சிக்கட்டிலில் அமர முடியும்” என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுவது போல உள்ளது.  இந்த பதிவை தஞ்சை வடசேரி […]

Continue Reading

FactCheck: திண்டுக்கல் சீனிவாசன் உளறியதாகக் கூறி பகிரப்படும் வதந்தி!

‘’அம்மா உயிரோடு இருந்திருந்தால் கூட இவ்வளவு சிறப்பாக நினைவிடம் அமைத்திருக்க முடியாது- திண்டுக்கல் சீனிவாசன்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், நியூஸ்7 தமிழ் ஊடகத்தின் பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை இணைத்துள்ளனர். அந்த கார்டில், ‘’அம்மா உயிரோடு இருந்திருந்தால் கூட இவ்வளவு சிறப்பாக நினைவிடம் அமைத்திருக்க முடியாது. முதல்வர் எடப்பாடி […]

Continue Reading

FACT CHECK: தி.மு.க-வுக்கு வாக்களிக்கச் சொன்ன எடப்பாடி பழனிசாமி?- ஃபேஸ்புக் வதந்தி

பொங்கல் பரிசு வாங்கிய கையோடு சட்டமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கவும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைக்கும் பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும். பொங்கல் […]

Continue Reading

Fact Check: தமிழக அரசின் பொங்கல் பணப் பரிசு அறிவிப்பை அண்ணாமலை விமர்சனம் செய்தாரா?

‘’மக்களிடம் கொள்ளையடித்த பணத்தில் மக்களுக்கே பொங்கல் பரிசு வழங்குகிறது,’’ என்று பாஜக அண்ணாமலை விமர்சனம் செய்ததாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 Facebook Claim Link 3 Archived Link 3 உண்மை அறிவோம்: மேற்கண்ட செய்தி ஒரு சர்ச்சைக்குரியதாகும். ஆம், இந்த செய்தியை முதலில் […]

Continue Reading

FACT CHECK: ராமதாஸ், நிவர் புயலை ஒப்பிட்டு எடப்பாடி பழனிசாமி பேசியதாக பரவும் போலிச் செய்தி!

நிவர் புயல் ஒரே இடத்தில் நிற்காமல் ராமதாஸ் மாதிரி மணிக்கொரு முறை மாறிக்கொண்டே இருக்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.  தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “நிவர் புயல் ஒரே இடத்தில் நிற்காமல் ராமதாஸ் மாதிரி மணிக்கொரு முறை மாறிக் […]

Continue Reading

எடப்பாடி பழனிசாமி பற்றி பகிரப்படும் தவறான பேனர் புகைப்படம்!

ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றி பகிரப்படும் பேனர் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதனை பலரும் உண்மை என ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர்.  Facebook Trending Link இதேபோல, ட்விட்டரிலும் ஏராளமானோர் இதனை உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர்.  Twitter Trending Link உண்மை அறிவோம்:சாமானின் முதல்வர் எனக் […]

Continue Reading

பால் பாக்கெட் போட்ட இடத்தில் இருப்பேன் என்று எஸ்.வி.சேகர் கூறினாரா?

“எங்கே வந்து பால் பாக்கெட் போட்டீர்களோ அங்கேயேதான் இருப்பேன்” என்று எஸ்.வி.சேகர் கூறியது போன்று நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link எடப்பாடி பழனிசாமி, எஸ்.வி.சேகர் புகைப்படத்துடன் கூடியு நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “முதல்வருக்கு எஸ்.வி.சேகர் பதிலடி! ஓடி ஒளிய வேண்டிய அவசியம் எனக்கில்லை. […]

Continue Reading

ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி பற்றி பரவி வரும் தவறான புகைப்படம்!

‘’ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் புகைப்படம்,’’ என்று கூறி பரவி வரும் ஒரு புகைப்படத்தை உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்திருக்க, எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் அவரை வணங்குவது போல காட்சி இடம்பெற்றுள்ளது. இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட புகைப்படத்தை உற்று கவனித்தால், ஓ.பன்னீர்செல்வமே சற்று பட்டும் படாமல்தான் அமர்ந்துள்ளார் என்று தெளிவாக தெரிகிறது. அதுவும் […]

Continue Reading

தமிழக அரசு மீது குற்றம்சாட்டினாரா தாமோதரனின் மனைவி?

கொரோனா பாதிப்பு காரணமாக தன்னுடைய கணவர் மரணம் அடைய முதல்வர் அலுவலகத்தின் அலட்சியம்தான் காரணம் என்று தனிச் செயலாளர் தாமோதரனின் மனைவி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தந்தி தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “என் கணவரின் மரணத்திற்கு முதல்வர் அலுவலகத்தின் அலட்சியம்தான் காரணம் – தனிச் செயலாளர் தாமோதரனின் மனைவி” என்று உள்ளது.  நிலைத் […]

Continue Reading

மேட்டூர் அணை திறப்பு விழாவில் சமூக இடைவெளி இல்லையா?- பழைய புகைப்படத்தால் சர்ச்சை

மேட்டூர் அணை திறப்பின் போது சமூக இடைவெளி கேள்விக்குறியானதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மேட்டூர் அணை திறப்பு விழா புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “கொரோனா பரவாமல் இருக்க சமூக இடைவெளி அவசியம் – அரசு” என உள்ளது. நிலைத் தகவலில், “ஒன்பது கிரகம் உச்சம்பெற்ற ஒருவனுக்கு மாஸ்க்கும் சமுக இடைவெளியும் அவசியமில்லாதது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Sabak […]

Continue Reading

தமிழகத்தில் மதுக்கடைகள் இயங்கும் என்று அறிவித்ததா தமிழக அரசு?

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மார்ச் 31ம் தேதி வரை இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்ததாக, ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 18 தமிழ் பிரேக்கிங் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மார்ச் 31 முதல் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை இயங்கும். – தமிழக அரசு” […]

Continue Reading

எடப்பாடி பழனிசாமியை பின்பற்றி மு.க.ஸ்டாலின் வயலில் நாற்று நடச் சென்றாரா?

‘’எடப்பாடி பழனிசாமியை காப்பி அடித்து மு.க.ஸ்டாலின் வயலில் நாற்று நடச் சென்றார்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு புகைப்படத்தை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த பதிவை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட ஃபேஸ்புக் புகைப்படம் பற்றி உண்மை அறிய இதனை கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது இது பல ஆண்டுகளாகவே […]

Continue Reading

இயேசுவை பிரார்த்திக்க சொன்னாரா முதல்வர் எடப்பாடி பழனிசாமி?- ஃபேஸ்புக் வதந்தி

‘’கொரோனா வைரஸ் தொடர்பாக வதந்திகளை நம்ப வேண்டாம். அனைவரும் இயேசுவிடம் பிரார்த்தனை செய்யுங்கள்,’’ என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழக முதலமைச்சர் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி கொரானா தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வதந்திகளை […]

Continue Reading

ஜெயலலிதா காலில் விழுந்த திண்டுக்கல் சீனிவாசன் படமா இது?

ஜெயலலிதா காலில் விழுந்த திண்டுக்கல் சீனிவாசன் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஜெயலலிதாவின் காலில் ஒருவர்  சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கிறார். ஜெயலலிதா கையில் உறுப்பினர் கார்டு உள்ளது. காலில் விழுந்தவர் யார் என்று தெரியவில்லை. புகைப்படத்தில் dinamalar.com என்ற வாட்டர் மார்க் தெரிகிறது.  நிலைத் தகவலில், “ஜெயலலிதா காலில் விழுந்து கிடக்கும் திண்டுக்கல் சீனிவாசன்..” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த […]

Continue Reading