
‘’ மேற்கு வங்காளத்தை நோக்கி படை எடுக்கும் காவி போராளிகள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ அனைத்து மாநிலங்களில் இருந்தும் வங்காளத்தை நோக்கி படை எடுக்கும் காவி போராளிகள் #மேற்குவங்காளம் ஹிந்து மக்களை காக்க மிக பெரிய படையே சென்று கொண்டிருக்கிறது இனிமேல் #ஹிந்துக்கள் மீது எவனும் கை வைக்க கனவிலும் நினைக்க மாட்டார்கள்…
#ஜெய்ஸ்ரீராம்…!!ஜெய்ஸ்ரீராம்…!!,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனுடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற ‘சிவாஜி கண்ட மராத்திய பேரரசு’ நினைவு பேரணி என்று தெரியவந்தது.
இதுபோன்ற பேரணி ஆண்டுதோறும் மகாராஷ்டிராவில் நடைபெறுவது வழக்கம். இந்த வீடியோவை எடுத்து, மேற்கு வங்க அரசியலுடன் தொடர்புபடுத்தி, வதந்தி பரப்புகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram
Title:மேற்கு வங்காளத்தை நோக்கி படை எடுக்கும் காவி போராளிகள் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: False


