இந்திய மக்கள் ஊழல் பற்றி புகார் செய்ய பிரதமர் அலுவலகம் ஹாட்லைன் தொடங்கியுள்ளதா?

அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India தவறாக வழிநடத்துபவை I Misleading

‘’அரசு சேவைகளில் லஞ்சம், தாமதம், மோசமான நடத்தை குறித்து குடிமக்கள் புகாரளிக்க பிரதமர் அலுவலகம் ஒரு ஹாட்லைனை தொடங்கியுள்ளது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ இப்போது நீங்கள் *ஊழலை நேரடியாக பிரதமர் அலுவலகத்திற்குப் புகாரளிக்கலாம்* !

அரசு சேவைகளில் லஞ்சம், தாமதம், மோசமான நடத்தை குறித்து குடிமக்கள் புகாரளிக்க பிரதமர் அலுவலகம் ஒரு ஹாட்லைனை ( *9851145045* ) தொடங்கியுள்ளது.,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2    

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இதில் கூறப்பட்டுள்ள 9851145045 என்ற தொடர்பு எண் நேபாளம் நாட்டைச் சார்ந்த ஒன்று, என்பது தெரியவந்தது. ஆம், அரசு சேவைகளில் லஞ்சம், தாமதம், மோசமான நடத்தை குறித்து குடிமக்கள் புகாரளிக்க நேபாள பிரதமர் அலுவலகம் மேற்கண்ட ஹாட்லைனை ஏற்படுத்தியுள்ளது. இதற்கும், இந்தியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 

கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…

myrepublica.nagariknetwork

இதன்படி, நேபாளம் நாட்டின் செய்தியை எடுத்து, ஊழல் புகார் கூற, இந்திய பிரதமர் அலுவலகம் ஹாட்லைன் வசதி ஏற்படுத்தியுள்ளது, என்று வதந்தி பரப்புகிறார்கள். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது என்று, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:இந்திய மக்கள் ஊழல் பற்றி புகார் செய்ய பிரதமர் அலுவலகம் ஹாட்லைன் தொடங்கியுள்ளதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Misleading

Leave a Reply