ஜார்கண்ட் அரசில் பாஜக அமைச்சர் என்று பரவும் பதிவால் குழப்பம்!

அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பொறுப்பேற்று ஹிமாச்சல பிரதேச முதலமைச்சர் பதவி விலகவேண்டும் என்று ஜார்கண்ட் மாநில பாஜக அமைச்சர் பேட்டி அளித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஒருவர் பேட்டி அளித்த வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “பஹால்காம் தாக்குதல் – இமாச்சல் முதலமைச்சரின் தவறால் நடந்ததாம் – ஜார்கண்ட் பிஜேபி அமைச்சர்,

(தாக்குதல் நடந்த மாநிலம் தெரியல) பிஜேபி அமைச்சர் இவ்வளவு அறிவாளியா இருந்தா – சங்கிகள் எவ்வளவு அறிவாளியா இருப்பாங்க??? 🤔🤦‍♀️🤦‍♀️🤦‍♀️😂😂😂 வளர்ப்பு அப்படி ” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஜார்கண்ட் மாநில பாஜக அமைச்சர் ஒருவர் பஹல்காம் தாக்குதலுக்கு ஹிமாச்சல பிரதேச காங்கிரஸ் முதலமைச்சர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியதாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஜார்கண்டில் இருப்பது ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோட்சா (ஜே.எம்.எம்) மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆகும். காங்கிரஸ் கூட்டணி அரசில் பாஜக அமைச்சர் உள்ளார் என்ற தகவலே நகைப்புக்குரியதாக உள்ளது. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

Archive

முதலில் ஜார்கண்ட் அமைச்சர் அளித்த பேட்டி தொடர்பான செய்தியைத் தேடி எடுத்தோம். அதில் பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்று ஹிமாச்சலபிரதேச காங்கிரஸ் முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்று ஜார்கண்ட் அமைச்சர் சுதிவ்ய குமார் சோனு (Sudivya Kumar Sonu) சர்ச்சை கருத்து என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஜார்கண்ட் முக்தி மோட்சா – காங்கிரஸ் கூட்டணி அரசிலிருந்து கொண்டு தாக்குதல் சம்பவம் எந்த மாநிலத்தில் நடந்தது என்று கூட தெரியாமல் பேட்டி அளித்துள்ள அமைச்சரின் கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

ஜார்கண்டில் 2024 சட்டமன்ற தேர்தலில் ஹேமந்த் சோரன் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்களும் அமைச்சர்களாக உள்ளனர். சுதிவ்ய குமார் சோனு ஜார்கண்ட் முக்தி மோட்சாவைச் சார்ந்தவர் என்றும் நகர்ப்புற மேம்பாடு, உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி, சுற்றுலா உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக அவர் இருப்பது தெரியவந்தது. 

உண்மைப் பதிவைக் காண: affidavit.eci.gov.in I Archive I news18.com I Archive

அவர் ஜார்கண்ட் முக்தி மோட்சாவை சார்ந்தவர் என்பதை உறுதி செய்ய கடந்த தேர்தலில் அவர் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட விவரத்தை இந்தியத் தேர்தல் ஆணைய இணையதளத்தில் தேடி எடுத்தோம். அதில், சுதிவ்ய குமார் ஜார்கண்ட் முக்தி மோட்சா சார்பில் போட்டியிட்டவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் சுதிவ்ய குமார் பாஜக அமைச்சர் இல்லை என்பது உறுதியாகிறது.

முடிவு:

ஜார்கண்டில் ஜேஎம்எம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளதும், சர்ச்சைக்குரிய பேட்டியை அளித்தவர் பாஜக-வை சார்ந்தவர் இல்லை, ஜேஎம்எம் கட்சியைச் சார்ந்தவர் என்பதும் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:ஜார்கண்ட் அரசில் பாஜக அமைச்சர் என்று பரவும் பதிவால் குழப்பம்!

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False

Leave a Reply