‘’கூடங்குளம் அணுக்கதிர் வீச்சால் இறந்து கரை ஒதுங்கும் மீன்கள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ *கூடங்குளத்தில் அணுக் கதிர்வீச்சினால் அழிவு தொடங்கி விட்டதாக தெரிகிறது. கோடிக் கணக்கில் மீன்கள் இறந்து இன்னும் கூட கரை ஒதுங்கிக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது*’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Archived Link l Claim Link 1 l Claim Link 2

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட செய்தி உண்மையா என நாம் விவரம் தேடினோம். அப்போது, இதுபற்றி தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ ஃபேக்ட்செக் குழு (@tn_factcheck) ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளதாக, தெரியவந்தது.

இதன்படி, கன்னியாகுமரி மாவட்டம், சின்னமுட்டம் பகுதியில் கிளாத்தி மீன்கள் அதிகளவில் பிடிபடுகின்றன. இவ்வகை மீன்களுக்கு விலை அதிகம் கிடைக்காது என்பதால், இவற்றை பிடிக்கும் மீனவர்கள், மீண்டும் கடலிலேயே கொட்டிச் செல்கின்றனர். இவ்வாறு கொட்டப்படும் மீன்கள் கூடங்குளம் அருகே உள்ள பெருமணல் கடற்கரை சுற்றி, கரையில் ஒதுங்கியுள்ளன. இதனை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த உண்மை தெரியாமல் சிலர் சமூக வலைதளங்களில் வீடியோ, புகைப்படங்களை பகிர்ந்து, வதந்தி பரப்புகிறார்கள், என்று தெளிவாகிறது.

எனவே நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:கூடங்குளம் அணுக்கதிர் வீச்சால் இறந்து கரை ஒதுங்கும் மீன்கள் என்று பரவும் வதந்தி!

Written By: Fact Crescendo Team

Result: Misleading