ரயில் நிலையத்தில் காவல்துறை உதவியுடன் செல்போன் திருடும் வட இந்திய நபர் என்ற தகவல் உண்மையா?

இந்தியா | India சமூக ஊடகம் | Social

‘’ரயில் நிலையத்தில் காவல்துறை உதவியுடன் செல்போன் திருடும் வட இந்திய நபர்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ காவல்துறை உதவியுடன் ரயில் புறப்பட்டதும் செல்போனை பிடுங்கும் வட இந்திய திருட்டு நாய் வட இந்தியாவில் பல இடங்களில் இது தொடர்வது ரயில்வே நிர்வாகத்திற்கு தெரியாதா?,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link  

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்: 

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இவர்கள் கூறுவதுபோல, இந்த வீடியோவில் செல்போன் பிடுங்கும் நபர் திருடன் இல்லை என்பதும், ரயில்வே போலீஸ் என்பதும் தெரியவந்தது. குறிப்பிட்ட நபர் சீருடை அணிந்து, பணியில் உள்ளபோதுதான் இவ்வாறு நடந்துகொண்டுள்ளார். 

அடுத்தப்படியாக, மேற்கண்ட வீடியோவை Gagandeep Singh என்ற வட இந்திய பத்திரிகையாளர் முதலில் X வலைதளத்தில் பகிர்ந்துள்ளதை கண்டோம்.

X Post Link

இதன்படி உத்தரப்பிரதேச மாநிலத்தில் RPF LUCKNOW DIVISION NER எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இதுபற்றி துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நமக்கு தெளிவாகிறது. 

கூடுதல் ஆதாரம்…

எனவே, உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரயில்வே போலீஸ் ஒருவருக்கும், பயணிக்கும் இடையே நடைபெற்ற வாக்குவாதம் தொடர்பான வீடியோ ஒன்றை எடுத்து, ‘’ரயில் நிலையத்தில் காவல்துறை உதவியுடன் செல்போன் திருடும் வட இந்திய நபர்,’’ என்று வதந்தி பரப்புகிறார்கள், சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:ரயில் நிலையத்தில் காவல்துறை உதவியுடன் செல்போன் திருடும் வட இந்திய நபர் என்ற தகவல் உண்மையா?

Written By: Pankaj Iyer  

Result: Misleading