
‘’ காசி தமிழ் சங்கமத்தில் பிரதமர் மோடி தமிழை தேசிய மொழியாக அறிவித்தார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (9049053770) வழியே அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார்.
Twitter Claim Link l Archived Link
உண்மை அறிவோம்:
காசி எனப்படும் தற்போதைய வாரணாசியில் பாஜக முன்முயற்சியில், ‘காசி தமிழ் சங்கமம்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதனை மோடி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் ஆதரவும், எதிர்ப்பும் ஒரு சேர எழுந்துள்ள நிலையில், இந்நிகழ்வில், ‘தமிழை தேசிய மொழியாக அறிவித்தார் மோடி’, என்று கூறி மேற்கண்ட வகையில் சிலர் செய்தி பரப்புகின்றனர்.
உண்மையில், இப்படி மோடி எங்கேயும் பேசவில்லை. அதேபோல, ஜூனியர் விகடன் லோகோவுடன் இந்த செய்தி பரவுவதால், இதுபற்றி நாம் அவர்களிடமும், பாஜக ஐ.டி., பிரிவு தரப்பிலும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:பிரதமர் மோடி தமிழை தேசிய மொழியாக அறிவித்தாரா?
Fact Check By: Fact Crescendo TeamResult: False
