‘’ கச்சத்தீவை மீட்க அண்ணாமலை தலைமையில் ஆலோசனைக் குழு அமைத்தார் மோடி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

தந்தி டிவி லோகோவுடன் உள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’ கச்சத்தீவை மீட்க முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை. ஆலோசனைக் குழுவின் தலைவராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமனம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் களமிறங்கிய பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, 2ம் இடம் பெற்று தோல்வியடைந்தார்.

இதனையடுத்து, சமூக வலைதளங்களில் பலரும் அண்ணாமலையை கேலி கிண்டல் செய்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், தற்போது கச்சத்தீவை மீட்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆலோசனைக் குழு அமைத்த மோடி, என்று குறிப்பிட்டு மேற்கண்ட வகையில் சிலர் சமூக வலைதளங்களில் தகவல் பரப்புகின்றனர். ஆனால், இது உண்மை கிடையாது.

இதுதொடர்பாக, நாம் பாஜக தமிழ்நாடு ஐ.டி., பிரிவு மற்றும் தந்தி டிவி டிஜிட்டல் பிரிவை தொடர்புகொண்டு பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.

மேலும், இதே டெம்ப்ளேட்டில் கடந்த ஏப்ரல் 1, 2024 அன்று தந்தி டிவி வெளியிட்ட உண்மையான செய்தியையும் ஆதாரத்திற்காகக் கீழே இணைத்துள்ளோம்.

இதன்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு தந்தி டிவி பெயரில் பரவும் போலியான ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:கச்சத்தீவை மீட்க அண்ணாமலை தலைமையில் ஆலோசனைக் குழு அமைத்தாரா மோடி?

Fact Check By: Fact Crescendo Team

Result: ALTERED