‘வெள்ள நிவாரண நிதி தர முடியாது’ என்று நயினார் நாகேந்திரன் கூறினாரா?   

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை தர முடியாது,’’ என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகினர். அடுத்த சில நாட்களிலேயே, தென் மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது. 

இதற்கிடையே தமிழ்நாடு அரசுக்கு உரிய வெள்ள நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று ஆளுங்கட்சியான திமுக வலியுறுத்தி வருகிறது. 

இதுதொடர்பாக, உதயநிதி ஸ்டாலின் மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடையே கடும் வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ளதும் இங்கே குறிப்பிட வேண்டிய விசயம். 

Hindu Tamil LinkTamil One India Link 

இந்த சூழலில் தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை தர முடியாது என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறியதாக, மேற்கண்ட வகையில் தகவல் பகிரப்படுகிறது. ஆனால், இதுபோன்று எந்த செய்தியையும் தந்தி டிவி வெளியிடவில்லை. இதுபற்றி நாம் தந்தி டிவி டிஜிட்டல் பிரிவில் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். 

மேலும், பாஜக ஐடி பிரிவிலும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். 

எனவே, நயினார் நாகேந்திரன் பெயரில் சிலர் வேண்டுமென்றே வதந்தி பரப்புகின்றனர் என்று உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

Avatar

Title:‘வெள்ள நிவாரண நிதி தர முடியாது’ என்று நயினார் நாகேந்திரன் கூறினாரா?

Written By: Fact Crescendo Team  

Result: False