
‘’அண்ணாமலை எனக்கு அறிவுரை கூற தேவையில்லை,’’ ’ என்று ஆளுநர் ரவி பேசியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
Facebook Claim Link l Archived Link
பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாடு ஆளுநர் ரவி அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதும், அதற்குப் பல்வேறு தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்படுவதும் அன்றாட வழக்கமாக மாறிவிட்டது. இந்த சூழலில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இதுபற்றி கருத்து ஒன்றை தெரிவித்தார்.
பல்வேறு ஊடகங்களும் இதுபற்றி செய்தி வெளியிட்ட நிலையில், இதே செய்தியை நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகமும் வெளியிட்டது.
அதன எடிட் செய்தே சிலர் மேற்கண்ட வகையில் தகவல் பகிர்ந்து வருகின்றனர். இதுகுறித்து நாம் நியூஸ் 18 தமிழ்நாடு ஆசிரியர் குழு தரப்பிலும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title: ‘அண்ணாமலை எனக்கு அறிவுரை கூற தேவையில்லை’ என்று ஆளுநர் ரவி பேசினாரா?
Written By: Fact Crescendo TeamResult: Altered
