செப்டம்பர் 1, 2025 முதல் ரூ.500 நோட்டுகள் நிறுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததா?

அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

‘’செப்டம்பர் 1, 2025 முதல் ரூ.500 நோட்டுகள் நிறுத்தப்படும்’’ என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ செப்டம்பர் – 1 முதல் ATMகளில் 500 ரூபாய் நோட்டு வழங்கபடாது. 100 200 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைக்கும் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு 👍

படிப்படியாக 500 ரூபாய் நோட்டுகள் புழக்கம்  குறைக்கப்படும் என்பதும் நிபுணர்களின் கருத்து” என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

இதேபோன்று, ரிசர்வ் வங்கி பெயரில் ஒரு அறிக்கையும் பகிரப்படுகிறது. 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா, என்று தகவல் தேடினோம். அப்போது, இது தவறான தகவல், என தெரியவந்தது. ஆம், ரிசர்வ் வங்கி வெளியிட்ட சமீபத்திய சுற்றறிக்கையில், ரூ.500 நோட்டுகள் நிறுத்தப்படுவதாக, எங்கேயும் கூறப்படவில்லை. 

அதாவது, ‘’By September 30, 2025: 75% of all ATMs shall dispense either rs 100 or rs 200 denmination banknotes from at least one cassette. By March 31, 2026: 90% of all ATMs shall dispense either rs 100 or rs 200 denmination banknotes from at least one cassette,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

இதன்படி, ‘’ATM கேசட்டுகள் (பணம் நிரப்பும் லாக்கர்) ரூ. 100, 200, 500 போன்ற கரன்சிகளால் நிரப்பப்படும். இந்த கேசட்டுகளில் வைக்கப்படும் பணத்தையே நாம் எடுக்க முடியும். ஒவ்வொரு ATM-க்கும் குறைந்தபட்சம் 4 கேசட்டுகள் இருக்கும். இவற்றில் ஏதேனும் ஒரு கேசட்டில் கண்டிப்பாக, ரூ100 அல்லது ரூ200 நோட்டுகளை நிரப்பவேண்டும். இந்த பணிகளுக்கு, செப்டம்பர் 30, 2025 முதல்கட்ட காலக்கெடு மற்றும் மார்ச் 31, 2026 இறுதி கெடு,’’ என்றுதான் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. 

எந்த இடத்திலும் ரூ500 நோட்டுகள் தடை செய்யப்படுவதாகக் கூறவே இல்லை. இதுதொடர்பாக, ரிசர்வ் வங்கி சென்னை அலுவலகத்தில் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். 

அடுத்தப்படியாக, மத்திய அரசுக்குச் சொந்தமான PIBFactCheck இதுபற்றி மறுப்பு கூறியுள்ளது. அதனையும் இங்கே ஆதாரத்திற்காக, இணைத்துள்ளோம். 

கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…

Live Mint l Hindustan Times

எனவே, ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை பற்றி வேண்டுமென்றே சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:செப்டம்பர் 1, 2025 முதல் ரூ.500 நோட்டுகள் நிறுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததா?

Written By: Pankaj Iyer  

Result: Misleading

Leave a Reply