
‘‘ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ஏறிய சிறுமியை பலாத்காரம் செய்த டிடிஆர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ஏறிய சிறுமியை கற்பழித்தார் சனாதன முறைப்படி இந்தியாவை ஆட்சி செய்யும் பாஜக ஒன்றிய அரசு TTR.
ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ஏறுபவர்களுக்கு இந்த புதுவித தண்டனை பற்றி எந்த கருத்தும் இதுவரை ஒன்றிய பாஜக அரசு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது உண்மை சம்பவம் கிடையாது என்றும், சித்தரிக்கப்பட்ட ஒன்று எனவும் தெரியவந்தது.

ஆம், official_rajthakur__ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பொழுதுபோக்கு மற்றும் விழிப்புணர்வு நோக்கில் பகிரப்பட்டுள்ள சித்தரிக்கப்பட்ட காட்சியை எடுத்து, உண்மை போன்று தவறான தகவல் பரப்புகிறார்கள்.

எனவே, சித்தரிக்கப்பட்ட வீடியோவை எடுத்து, ‘ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ஏறிய சிறுமியை பலாத்காரம் செய்த டிடிஆர்’ என்று கூறி, வதந்தி பரப்புகிறார்கள், என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
Title:ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ஏறிய சிறுமியை டிடிஆர் பலாத்காரம் செய்தாரா?
Fact Check By: Pankaj IyerResult: Misleading


