‘’எடப்பாடியார் இல்லையென்றால் சிஏஏ அமலுக்கு வந்திருக்கும்,’’ என்று எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட வகையில் நெல்லை முபாரக் எங்கேயும் பேசினாரா அல்லது எஸ்டிபிஐ கட்சி எதுவும் செய்தி வெளியிட்டதா என்று தகவல் தேடினோம். ஆனால், இவ்வாறு எந்த செய்தியும் காண கிடைக்கவில்லை.

இதன்பேரில், நாம் எஸ்டிபிஐ கட்சியின் (தமிழ்நாடு பிரிவு) அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் தேடியபோது, அவர்கள் வெளியிட்டிருந்த மற்றொரு செய்தி காண கிடைத்தது.

இதனை எடுத்தே சிலர் வேண்டுமென்றே எடிட் செய்து, எஸ்டிபிஐ பெயரில் வதந்தி பரப்புவதாகச் சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. உண்மையான செய்தியையும், போலியான செய்தியையும் ஒப்பிட்டு, கீழே இணைத்துள்ளோம்.

கூடுதல் ஆதாரத்திற்காக, எஸ்டிபிஐ கட்சி சமீபத்தில் மதுரையில் நடத்திய மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் பேசிய வீடியோவை கீழே இணைத்துள்ளோம்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘எடப்பாடியார் இல்லையென்றால் சிஏஏ அமலுக்கு வந்திருக்கும்’ என்று நெல்லை முபாரக் கூறினாரா?

Written By: Fact Crescendo Team

Result: Altered