‘’ தமிழ்நாடு அரசின் வெள்ள நிவாரண தொகையை வாங்கி நாம் தமிழர் கட்சிக்கு தர சொன்ன சீமான்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

புதிய தலைமுறை லோகோவுடன் உள்ள இதில், ‘’ நிவாரணத் தொகை - சீமான் வேண்டுகோள். தமிழ்நாடு அரசு வழங்கும் வெள்ள நிவாரணத் தொகையை பெறும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் எல்லோரும் அத்தொகையை நம் கட்சியின் திரள் நிதிக்கு அனுப்ப வேண்டும் என சீமான் வேண்டுகோள். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகினர். இதனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், தமிழ்நாடு அரசு வழங்கும் வெள்ள நிவாரணத் தொகையை பெறும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் எல்லோரும் அத்தொகையை கட்சியின் திரள் நிதிக்கு அனுப்ப வேண்டும் என்று சீமான் கூறியதாக, மேற்கண்ட வகையில் சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்படுகிறது.

ஆனால், இவ்வாறு எந்த கோரிக்கையும் சீமான் வெளியிடவில்லை. இதுதொடர்பாக, நாம் சீமான் அலுவலகத்திலும், புதிய தலைமுறை ஊடகம் தரப்பிலும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.

எனவே, சீமான் பெயரில் சிலர் வேண்டுமென்றே வதந்தி பரப்புகின்றனர் என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:தமிழ்நாடு அரசின் வெள்ள நிவாரண தொகையை வாங்கி நாம் தமிழர் கட்சிக்கு தர சொன்னாரா சீமான்?

Written By: Fact Crescendo Team

Result: False