
‘’மதவெறி காரணமாக முஸ்லீம் நபரின் தாடியை பிடித்து இழுக்கும் இந்தியர்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ *இந்தியா வல்லரசு ஆயிடுச்சு* ▫️▫️▫️▫️▫️▫️▫️▫️
_ஆரிய வந்தேறி பார்ப்பனியம் எந்த அளவிற்கு மதவெறியை ஊட்டி வளர்த்திருக்கிறது பார்த்தீர்களா_ ❓’’ என்று எழுதப்பட்டுள்ளது.
Claim Link 1 l Claim Link 2
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது கடந்த அக்டோபர் மாதம் சூடான் நாட்டில் நிகழ்ந்த சம்பவம் என்பதற்கான ஆதாரம் கிடைத்தது.
இதன்படி, சூடான் நாட்டில் செயல்பட்டு வரும் Rapid Support Forces (RSF) என்ற ஆயுதக்குழு சமீபத்தில் Al-Kamelin என்ற இடத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அப்போது, உள்ளூர் மக்களை சிறைபிடித்து, இவ்வாறு அவமானப்படுத்தியதாக, தெரியவருகிறது.
கூடுதல் செய்தி ஆதாரங்கள் இதோ…
எனவே, சூடான் நாட்டில் எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்து, இந்துத்துவ வெறிதான் இதற்கு காரணம் என்று கூறி, வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள், என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:மதவெறி காரணமாக முஸ்லீம் நபரின் தாடியை பிடித்து இழுக்கும் இந்தியர் என்று பரவும் தகவல் உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: Misleading
