
‘’ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 3 அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ *அக்.,3 வெள்ளிக்கிழமை பொது விடுமுறை!*
ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக அறிவித்தது தமிழ்நாடு அரசு.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இதுபோன்ற எந்த அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை என்றும், இது ஒரு வதந்தி என்றும் தெரியவந்தது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையில் (TNDIPR) பேசி, உறுதிப்படுத்தியுள்ளோம்.
அடுத்தப்படியாக, தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ FactCheck குழு (@tn_factcheck) இதுபற்றி மறுப்பு வெளியிட்டுள்ளதையும் கண்டோம்.

கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…
Dailythanthi l Puthiyathalaimurai TV l Thanthi TV
நாம் இந்த ஃபேக்ட்செக் கட்டுரை வெளியிடும் நொடி வரையிலும் அக்டோபர் 3, 2025 அன்று விடுமுறை எதுவும் தமிழ்நாடு அரசு அறிவிக்கவில்லை. ஒருவேளை மறு அறிவிப்பு வந்தால் நாம் அதனையும் அப்டேட் செய்ய தயாராக உள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் வெறும் வதந்தி, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 3 அன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டதா?
Fact Check By: Pankaj IyerResult: False
