
‘’ஜார்க்கண்ட், வயநாடு, கர்நாடகா தேர்தல் தோல்வியை கொண்டாடிய தமிழிசை’’, என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’போடுப்பா வெடிய… ஜார்க்கண்ட்டில் தோல்வி வயநாட்டில் தோல்வி கர்நாடகா அனைத்து இடைத்தேர்தல்களில் பாஜக தோல்வி அடைந்த நிலையில் அதை கொண்டாடும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை’’ என்று எழுதப்பட்டுள்ளது.
புதிய தலைமுறை லோகோவுடன் உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது எடிட் செய்யப்பட்ட ஒன்று என தெரியவந்தது.
மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை, தமிழிசை சௌந்தரராஜன் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்.
கூடுதல் செய்தி ஆதாரம்…
ஆனால், இதுபற்றி புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்ட நியூஸ் கார்டை வேண்டுமென்றே எடிட் செய்து, சிலர் வதந்தி பரப்புகிறார்கள்.
உண்மையான நியூஸ் கார்டையும், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல், தவறானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:ஜார்க்கண்ட், வயநாடு தேர்தல் தோல்வியை கொண்டாடினாரா தமிழிசை?
Written By: Pankaj IyerResult: Altered
