‘‘விஜய் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கட்சியை விட்டு விலகுகிறேன்’’ என்று புஸ்ஸி ஆனந்த் அறிவித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

தந்த டிவி லோகோவுடன் உள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’கட்சி பொறுப்புகளில் இருந்து விலக முடிவு? த.வெ கழக தலைவரும் நடிகருமான விஜய் அவர்களோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சி பொறுப்புகள் அனைத்திலும் இருந்து விலகும் முடிவில் இருக்கிறேன் – பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link l Archived Link

இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இவ்வாறு ஏதேனும் அறிவிப்பு வெளியிட்டாரா என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தேடினோம். ஆனால், எந்த செய்தியும் காணக் கிடைக்கவில்லை.

இதையடுத்து, தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு நிர்வாகியை தொடர்பு கொண்டு, விளக்கம் கேட்டோம். அவர், ‘’இது நாங்கள் வெளியிட்ட நியூஸ் கார்டு இல்லை. எங்களது பெயரில் பரவும் போலியான செய்தி,’’ என்று தெரிவித்தார்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு, தந்தி டிவி பெயரில் பகிரப்படும் போலியான ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘விஜய் உடன் மோதல்; கட்சியை விட்டு விலகுகிறேன்’ என்று புஸ்ஸி ஆனந்த் அறிவித்தாரா?

Written By: Fact Crescendo Team

Result: False