கிளாஸ்கோவ் மாநாட்டில் பேசிய இந்திய ஐஏஎஸ் அதிகாரி விஜய் சிங் என்ற தகவல் உண்மையா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’கிளாஸ்கோவ் மாநாட்டில் பிரிட்டிஷ் சுரண்டலை எதிர்த்து தைரியமாகப் பேசிய இந்திய ஐஏஎஸ் அதிகாரி விஜய் சிங்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (9049044263) அனுப்பி, சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் நாம் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக்கில் சிலர் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். 

அந்த லிங்கை கீழே இணைத்துள்ளோம். 

Facebook Claim Link l Archived Link 


உண்மை அறிவோம்:

குறிப்பிட்ட வீடியோவில் பேசும் நபர், ‘இந்தியா, ஆப்ரிக்கா போன்ற நாடுகளைச் சுரண்டி வளர்ந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், அதனை மறந்துவிட்டு, தொடர்ந்து எங்களுக்கு பாடம் நடத்துவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்,’ என்று சாடுகிறார். சமீபத்தில் குஜராத்தில் நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தை மையமாக வைத்து பிபிசி ஊடகம் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தது.

இதற்கு வலதுசாரி ஆதரவாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து, ஆவணப்படத்திற்கு பதிலாக, பிரிட்டிஷார் இந்தியாவை சுரண்டியது பற்றி பேசலாமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இந்த சூழலில்தான், மேற்கண்ட வகையில் சர்வதேச மேடையில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பிரிட்டிஷாரை எதிர்த்து தைரியமாகப் பேசியுள்ளார் என்று குறிப்பிட்டு, இந்த வீடியோவை சிலர் சமூக வலைதளங்களில் பகிர்கிறார்கள்.

உண்மையில், இதில் இருப்பவரின் பெயர் விஜய் சிங் இல்லை; விஜய் பிரசாத். அவர் ஐஏஎஸ் அதிகாரி கிடையாது, பத்திரிகையாளர் ஆவார். 

இதுபற்றி அவரது ட்விட்டர் பக்கத்தில் அவரே பதிவு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். கடந்த 30 ஆண்டுகளாகக் கிடைக்காத முக்கியத்துவம் தற்போது கிடைப்பது ஆச்சரியமாக உள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார். 

COP26 Coalition என்ற அந்த நிகழ்வின் முழு வீடியோ கீழே தரப்பட்டுள்ளது. 

2021ல் நிகழ்ந்த COP26 Coalition என்ற வீடியோவை எடுத்து, புதியதுபோல தற்போது பகிர்ந்து பத்திரிகையாளர் ஐஏஎஸ் அதிகாரி என குறிப்பிட்டு வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 


முடிவு
:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

Avatar

Title:கிளாஸ்கோவ் மாநாட்டில் பேசிய இந்திய ஐஏஎஸ் அதிகாரி விஜய் சிங் என்ற தகவல் உண்மையா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: MlSLEADlNG