
‘’ஆசிரியை காலுக்கு மசாஜ் செய்யும் பள்ளி மாணவிகள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ Madam நல்லா இருக்கா??? நல்லா சுகமா இருக்கா மசாஜ்??,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனுடன், பள்ளி ஆசிரியை காலுக்கு மாணவிகள் மசாஜ் செய்வது போன்ற காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இந்த வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்படவில்லை, என்று தெரியவந்தது.

இதன்படி, ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பண்டப்பள்ளி பழங்குடி நலப் பள்ளியில் மேற்கண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்கள் மூலமாக வைரலாகப் பரவிய நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியை உடனே சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…
NDTV l India Today l Times of India l The News Minute·
இதன்மூலமாக, ஆந்திராவில் எடுத்த வீடியோவை தமிழ்நாட்டில் நடந்தது போன்று தவறான தகவல் பரப்புகிறார்கள், என்று நமக்கு தெளிவாகிறது.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல், தவறானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram
Title:‘ஆசிரியை காலுக்கு மசாஜ் செய்யும் பள்ளி மாணவிகள்’ வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதா?
Fact Check By: Pankaj IyerResult: Misleading


