
பன்றிக்கு பூணூல் போடும் போராட்டத்தை தி.க நடத்தியது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பன்றியுடன் ஒருவர் இருக்கும் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “பன்றிக்கு பூணூல் போட்டு திக போராட்டம்… இதுக்கு எதுக்குடா பன்றியை கொடுமைபடுத்துறீங்க,அவனுக்கே போட்டு விட்ருக்கலாம்.. பொருத்தமா இருந்திருக்கும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
திராவிடர் கழகம் சார்பில் சமீபத்தில் பன்றிக்கு பூணூல் அணியும் போராட்டம் நடத்தியது போன்று சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், அப்படி எந்த போராட்டமும் நடந்தது போன்று செய்தி இல்லை. மத நம்பிக்கையை கொச்சைப்படுத்திவிட்டதாக இவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். பிற மதத்தினரையும் இதை வைத்து விமர்சித்து வருகின்றனர். எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
உண்மைப் பதிவைக் காண: oneindia.com I Archive
புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த செய்தி வெளியாகி இருப்பது தெரிந்தது. 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி இந்த செய்தி மற்றும் புகைப்படத்தை ஒன் இந்தியா தமிழில் வெளியிட்டிருந்தது. அதில் தந்தை பொியார் திராவிடர் கழகம் சார்பில் பன்றிகளுக்கு பூணூல் அணிவித்து போராட்டம் நடத்துவதாக இருந்தது. மிருகவதைத் தடைச் சட்டத்தின் கீழ் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சார்ந்த 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்கள் இல்லை. 2012ம் ஆண்டில் தி.க-வில் இருந்து சிலர் பிரிந்து தொடங்கியதுதான் பெரியார் திராவிடர் கழகம். எனவே, தி.க பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டம் நடத்தியது என்று கூறுவதே தவறானது. மேலும் 2017ம் ஆண்டு நடந்த சம்பவத்தை எடுத்து 2025ல் சமீபத்தில் நடந்தது போன்று தவறாக பதிவிட்டுள்ளனர். இதன் மூலம் உண்மையை மறைத்து தவறான தகவலை பரப்பி இரு தரப்பினரிடையே மோதலை தூண்டும் வகையில் பதிவிட்டிருப்பது தெளிவாகிறது.
முடிவு:
2017ல் தபெதிக பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டம் நடத்தியதை இப்போது திராவிடர் கழகம் நடத்தியது போன்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் சமீபத்தில் நடந்ததா?
Fact Check By: Chendur PandianResult: False
