பாஜக.,வில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று காயத்ரி ரகுராம் கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’ பாஜக.,வில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை,’’ என்று காயத்ரி ரகுராம் கூறியதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

Facebook Claim Link l Archived Link 

உண்மை அறிவோம்:

பாஜக.,வைச் சேர்ந்த திருச்சி சூர்யா சிவா மற்றும் டெய்சி ஆகியோர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, சில ஆடியோ பதிவுகள் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், இதற்கு காயத்ரி ரகுராமை காரணம் காட்டி, மாநில தலைவர் அண்ணாமலை, காயத்ரியை சஸ்பெண்ட் செய்தார்.

Dinamalar Link I The New Indian Express Link 

இந்த விவகாரம் தொடர்பாக, காயத்ரி பெயரில் ஏராளமான வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவுகின்றன. அவை பற்றி நாமும் உண்மை கண்டறிந்து செய்தி வெளியிட்டு வருகிறோம். அவற்றின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது. 

Fact Crescendo Tamil Link 1 l  Fact Crescendo Tamil Link 2


இந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு போலியான செய்தியே மேற்கண்டதும். இதுபற்றி நாம் புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவில் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம். எனவே, இதனை நமது வாசகர்கள் பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். 

Tweet Link

முடிவு
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:பாஜக.,வில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று காயத்ரி ரகுராம் கூறினாரா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: False