வயநாட்டில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மீட்புப் பணியில் ஈட்டுள்ளனர் என்று சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றைப் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மழை வெள்ள மீட்புப் பணி புகைப்படங்கள் சில ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், "#ஆர்எஸ்எஸ் என்றென்றும் மக்கள் சேவையில்... RSS என்றால் Ready for Social Service ன்னு சும்மாவா சொன்னார்கள்... கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள சூரல்மாலா நிலச்சரிவில் ஆர்எஸ்எஸ் ஸ்வயம் சேவகர்கள் மற்றும் சேவா பாரதி தொண்டர்கள் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். #RSS4Nation #Wayanadlandslide" என்று கறிப்பிடப்பட்டிருந்தத.

உண்மைப் பதிவைக் காண: Facebook

மற்றொரு பதிவின் நிலைத் தகவலில், "Helping hands are holier than praying lips. உவயநாட்டு, சூரல்மாலா நிலச்சரிவில் ஆர்எஸ்எஸ் RSS தொண்டர்கள் மற்றும் சேவா பாரதி தொண்டர்கள் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணிகளில் RSS, சேவாபாரதியும் தீவிரமாக களத்தில் உள்ளது.உடல்களை கண்டெடுப்பது ...உயிரோடு இருப்பவா்களுக்கு உணவு..உடைகள் வழங்கி தேற்றுவது போன்ற பணிகளில் தீவிரமாக உள்ளது. அத்தோடு உடல்களை அவரவா் இருப்பிடங்களில் தகனம் செய்ய முடியாத நிலை உள்ளதால் சேவாபாரதியின் நடமாடும் தகனப்பிரிவான சிதாக்னி மூலம் உடல்கள் தகனம் செய்யும் பணி துவங்கியுள்ளது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வயநாடு நிலச்சரிவு பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. அந்த பணியில் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றன. இப்படிப் பரவும் படங்களில் பலவும் பழைய படங்களாக இருப்பதைக் காண முடிகிறது. எனவே, சந்தேகத்தின் அடிப்படையில் இந்த பதிவில் உள்ள புகைப்படங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம்.

Archive

புகைப்படத்தைக் கூகுள் லென்ஸ் இணையதளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த பதிவில் இடம் பெற்ற மூன்றில் இரண்டு புகைப்படங்கள் 2019ம் ஆண்டு எடுக்கப்பட்டவை என்பது தெரியவந்தது. மூன்றாவது புகைப்படத்தை, வயநாட்டில் உடல்களை தகனம் செய்யும் பணியில் ஆர்.எஸ்.எஸ் என்று குறிப்பிட்டு சில வலதுசாரி ஊடகங்கள் வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. ஆனால், அது தொடர்பாக வேறு எந்த தகவலும் நமக்குக் கிடைக்கவில்லை.

சகதியில் மீட்புப் பணிகள் நடைபெறும் புகைப்படமானது 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி Friends of RSS (@friendsofrss) என்ற எக்ஸ் தள பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. அதில் கேரள மாநிலம் வயநாடு புதுமலா, மேப்பாடியில் ஆர்எஸ்எஸ் ஸ்வயம்சேவக், சேவா பாரதி தொண்டர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் 2019ம் ஆண்டில் எக்ஸ் தளத்தில் பலரும் இந்த புகைப்படத்தைப் பதிவிட்டிருந்ததையும் காண முடிந்தது.

Archive

இந்த புகைப்படம் வயநாட்டில் எடுக்கப்பட்டதுதான். ஆனால் இப்போது அல்ல... 2019ம் ஆண்டு இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம். அல்லது அதற்கு முந்தைய ஆண்டு கூட எடுக்கப்பட்டிருக்கலாம். பழைய புகைப்படங்களை எடுத்து 2024 வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள சூழலில் இப்போது நடந்தது போன்று தவறாகப் பகிர்ந்துள்ளனர். இதன் அடிப்படையில் இந்த பதிவு உண்மையை மறைத்துப் பாதி உண்மையுடன் வெளியான பதிவாக உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

வயநாட்டில் 2019ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மேற்கொண்ட மீட்புப் பணி புகைப்படங்களை 2024ம் ஆண்டில் வயநாட்டில் எடுக்கப்பட்டது என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:வயநாட்டில் ஆர்.எஸ்.எஸ் களப்பணி என்று பரவும் புகைப்படங்கள் தற்போது எடுக்கப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian

Result: False