மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொண்டு வந்த உணவை பாஜக நிர்வாகிகளே சாப்பிட்டுவிட்டுச் சென்றனர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தமிழ்நாடு பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா மற்றும் பாஜக-வினர் சமைத்த உணவை எடுத்து வரும் புகைப்படம் மற்றும் அவர்கள் சாப்பிடும் புகைப்படத்தை இணைத்து ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "எடுத்துட்டு வந்த சாப்பாடு நீங்களே சாப்பிடுறீங்களா டா🤦 பிஜேபி atrocities.." என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

சென்னையில் டிசம்பர் முதல் வாரத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தை வைத்து சமூக ஊடகங்களில் உண்மையுடன் தவறான தகவலும் பகிரப்பட்டு வருகிறது. தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு என்று கொண்டு வந்த உணவை அவர்களே சாப்பிட்டுவிட்டுச் சென்றனர் என்று வதந்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

சில ஆண்டுகளாக இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. கடந்த 2022ம் ஆண்டில் இந்த புகைப்படத்தை வைத்து வதந்தி ஒன்று பரப்பப்பட்ட நினைவு இருந்தது. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம். முதலில் இந்த புகைப்படம் தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவில் வெளியான கட்டுரையைத் தேடி எடுத்தோம். 2022ம் ஆண்டு பாஜக நடத்திய உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு என்று இந்த புகைப்படத்தை வைத்த வதந்தி பரப்பப்பட்டபோது நாம் ஆய்வு செய்திருந்தோம். அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

2020ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த புகைப்படத்தை வைத்து "இப்படி தொடங்கியது, இப்படி முடிந்தது" என்று எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பதிவிடப்பட்டிருந்தது தெரிந்தது. இதன் மூலம் இந்த புகைப்படங்களுக்கும் 2023 சென்னை மழை வெள்ளத்துக்கும் தொடர்பில்லை என்பது தெளிவாகிறது!

Archive

இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை தொடர்புகொண்டு கேட்டோம். சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் வதந்தி பற்றி அவரிடம் கூறினோம். அதற்கு அவர், "இந்த புகைப்படம் 2020ல் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டது. காலையிலிருந்து பல பகுதிகளுக்கு உணவு விநியோகம் செய்தோம். காலையிலிருந்து எதுவும் சாப்பிடாததால் கடைசியில் எங்களால் முடிந்த அளவுக்கு மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி முடித்த பிறகு மீதி இருந்த உணவில் கொஞ்சம் சாப்பிட்டோம்" என்றார்.

நம்முடைய ஆய்வில் இந்த புகைப்படம் 2023 மழை வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டது இல்லை, 2020ல் எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தயாரித்த உணவை பாஜக-வினரே சாப்பிட்டுவிட்டனர் என்று பகிரப்படும் தகவல் உண்மையில்லை என்று எஸ்.ஜி.சூர்யா உறுதி செய்துள்ளார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க கொண்டு வந்த உணவை தாங்களே சாப்பிட்டு தீர்த்த பாஜக-வினர் என்று பரவும் புகைப்படம் 2020ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கிய பிறகு அவர்கள் சாப்பிட்டதும் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:‘கொண்டு வந்த உணவை சாப்பிட்டு சென்ற பா.ஜ.க-வினர்’ என்று பரவும் படம் உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False