ராமேஸ்வரத்தில் அண்ணாமலை பாதயாத்திரை தொடக்க விழாவில் பங்கேற்க வந்த பாஜக தொண்டர்கள் பிரியாணி அண்டாக்களை திருடிச் சென்றனர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive

பிரியாணி அண்டாக்களை பைக்கில் எடுத்துச் செல்லும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், "ராமேஸ்வரத்தில் பிரியாணி அண்டாக்களை திருடி செல்லும் பாஜக தொண்டர்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெயா பிளஸ் இந்த செய்தியை வெளியிட்டது போல அதில் லோகோ உள்ளது.

நிலைத் தகவலில், "என்ன கருமாந்திரம்டா பொறுக்கிப் பயலே 🐐 @annamalai_k ??? 😂😂😂🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

இருட்டு வீட்டுக்கு போனாலும் திருட்டு கை நிக்காதுன்னு ஒரு சொலவடை உண்டு.. அதேபோல இந்த பாஜககாரனுங்க எங்க போனாலும் இந்த திருட்டு, கொலை, கொள்ளை, ரௌடித்தனம், பாலியல் பலாத்காரம் விடியோ ஆடியோ இல்லாமல் இருக்காது போல.. " என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ட்விட்டரில் Surya Born To Win @Surya_BornToWin என்ற ஐடி கொண்டவர் இதை 2023 ஜூலை 28ம் தேதி வெளியிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த படத்தை ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

புகைப்படத்தைப் பார்த்தால் ஜெயா பிளஸ் வெளியிட்டது போல் உள்ளது. எனவே, சந்தேகத்தின் அடிப்படையில் இந்த பதிவை ஆய்வு செய்தோம். முதலில் ஜெயா பிளஸ் 2023 ஜூலை 28ம் தேதி வெளியிட்ட செய்திகள், நியூஸ் கார்டுகளை அதன் சமூக ஊடக பக்கங்களில் பார்வையிட்டோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த பதிவும் இல்லை.

இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடிப் பார்த்தோம். அதில் நமக்கு எந்த முடிவும் கிடைக்கவில்லை. இந்த புகைப்படத்தை பார்க்கும் போது யூடியூப் வீடியோ முகப்பு படம் போல் உள்ளது. எனவே, யூடியூபில் பிரியாணி, அண்டா, பாஜக என்று சில கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடிப் பார்த்தோம். அப்போது, ஓராண்டுக்கு முன்பு இந்த முகப்பு படத்தை பயன்படுத்தி ஜெயா பிளஸ் செய்தி வெளியிட்டிருப்பது தெரிந்தது.

அதில், "பிரியாணி அண்டாக்களைத் திருடிச் சென்ற மர்ம நபர்கள்" என்று இருந்தது. அந்த செய்தியைப் பார்த்தோம். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் பிரியாணி அண்டாக்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை செய்தது பாஜக-வினர் என்று குறிப்பிடப்படவில்லை. மர்ம நபர்கள் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த முகப்பு படத்தை எடிட் செய்து, தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ராமேஸ்வரத்தில் பாஜக தொண்டர்கள் பிரியாணி அண்டாக்களுடன் திருடிச் சென்றனர் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ராமேஸ்வரத்தில் பிரியாணி அண்டா திருடிச் செல்லும் பாஜக தொண்டர்கள் என்று பரவும் வதந்தி!

Written By: Chendur Pandian

Result: False