‘’மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் செல்கிறார்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் செல்வதாக, ஏதேனும் அறிவிப்பு வெளியிட்டுள்ளாரா என்று தகவல் தேடினோம். ஆனால், எந்த செய்தியும் காண கிடைக்கவில்லை.

அதேசமயம், கடந்த 2023ம் ஆண்டு அவர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள சிங்கப்பூர் சென்ற போது வெளியான செய்தி இது என்று தெரியவந்தது.

சமூக வலைதளங்களில் மேற்கண்ட செய்தி வைரலாக பகிரப்படுவதைத் தொடர்ந்து, இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ FactCheck குழு (@tn_factcheck) X தளத்தில் விளக்கம் அளித்துள்ளது.

இதன்படி, பழைய செய்தியை எடுத்து, புதியது போல வதந்தி பரப்புகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் செல்கிறார் என்று பகிரப்படும் பழைய செய்தியால் சர்ச்சை…

Written By: Fact Crescendo Team

Result: MISLEADING