‘’பட்டியலின மக்கள் மற்றும் அம்பேத்கர் பற்றி ஆர்.பி.வி.எஸ் மணியன் கூறிய கருத்துக்கு அண்ணாமலை ஆதரவு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

ABP Nadu லோகோவுடன் கூடிய இந்த செய்தியில், ‘’அண்ணல் அம்பேத்கர் மற்றும் பட்டியலின மக்கள் குறித்து ஐயா ஆர்.பி.வி.எஸ் மணியன் பேசியதில் நான் முழுமையாக உடன்படுகிறேன் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ’’, என்று எழுதப்பட்டுள்ளது.

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அண்ணல் அம்பேத்கர் மற்றும் பட்டியல் சமூகத்தினரை அவதூறாகப் பேசியதற்காக, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவரான ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது செய்யப்பட்டுள்ளார்.

BBC Tamil Link l Hindu Tamil Link l Indian Express Link

இந்நிலையில், அவரது பேச்சுக்கு ஆதரவாக அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளதாக, மேற்கண்ட வகையில் சிலர் தகவல் பரப்புகின்றனர்.

எனவே, இதுபற்றி நாம் ABP Nadu டிஜிட்டல் பிரிவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது, “இந்த நியூஸ்கார்டு போலியான ஒன்று; நாங்கள் இதனை வெளியிடவில்லை’’ என்றனர்.

மேலும், ஆர்.பி.வி.எஸ் மணியன் கைது குறித்து அவர்கள் வெளியிட்ட செய்தி ஒன்றின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தியை ABP Nadu வெளியிடவில்லை என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:ஆர்.பி.வி.எஸ் மணியன் பேச்சுக்கு அண்ணாமலை ஆதரவு தெரிவித்தாரா?

Written By: Fact Crescendo Team

Result: False