
‘’பாஜக.,வினர் என் வீட்டுக்கு வந்தால் அதிமுக.,வின் ஆண்மையை நிரூபிக்கிறேன்,’’ என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சவால் விட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Lin
இதனை பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
‘’தமிழ்நாட்டில் தற்போது ஆளுங்கட்சியாக உள்ள திமுக.,வை சட்டமன்றத்தில் எதிர்த்துப் பேசக் கூட எதிர்க்கட்சியான அதிமுக உறுப்பினர்கள் தயங்குகிறார்கள், ஆண்மையுடன் செயல்படுவதில்லை,’’ என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அண்மையில் பேசியிருந்தார். இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நயினார் நாகேந்திரன் கருத்துக்கு, அதிமுக.,வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த பின்னணியில்தான் மேற்கண்ட நியூஸ் கார்டை பலரும் பகிர்ந்து வருகின்றனர். ஜெயக்குமார் தன் வீட்டுக்கு நேரில் வந்தால், ஆண்மையை நிரூபிக்கிறேன் என்று பாஜக.,வினருக்கு அழைப்பு விடுத்ததாக, பகிரப்படும் மேற்கண்ட செய்தி, உண்மையானது இல்லை. ஆம், நியூஸ்7 தமிழ் பெயரில் தயாரித்து பகிரப்படும் போலியான செய்தியாகும். இதுபற்றி நாம் நியூஸ் 7 தமிழ் ஊடகத்தின் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சுகிதாவிடம் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.
எனவே, மேற்கண்ட நியூஸ் கார்டு போலியான ஒன்று என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவினருக்கு சவால் விடுத்தாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
