ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமைக்கப்பட்டுள்ள ‘பாரசீக பாலம்’ இதுவா?

False அரசியல் சார்ந்தவை | Political சர்வதேசம் | International

‘’ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமைக்கப்பட்டுள்ள பாரசீக பாலம்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ #பாரசீகபாலம்

 ஈரானின் தெஹ்ரானில் அமைந்துள்ள “பாரசீக பாலம் என்று அழைக்கப்படும் பாலம்  மனதைக் கவரக்கூடிய கட்டிடக்கலை அம்சத்தைக் கொண்டுள்ளது.

இந்த அமைப்பு உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் மால்களில் ஒன்றான ஈரான் மாலின் ஒரு பகுதியாகும், இது தெஹ்ரானில் அமைந்துள்ளது. 

இந்தப் பாலத்தில் பண்டைய பாரசீக வீரர்களை குதிரையில் சவாரி செய்வதை சித்தரிக்கும் பிரமாண்டமான சிலைகள் வரிசையாக இடம்பெற்றுள்ளன, இது ஈரானின் வளமான வரலாற்று மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. 

பூரியா ஜமானியால் உருவாக்கப்பட்ட இந்த வடிவமைப்பு, ஈரானிய சின்னங்களையும் வரலாற்றையும் நகர்ப்புற திட்டமிடலில் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, குடிமக்கள் மற்றும் கலாச்சார அடையாளத்திற்கான மரியாதையை வலியுறுத்துகிறது. 

இந்த சிலைகள் நவீன நகர்ப்புறத்திற்குள் ஒரு முக்கிய அடையாளமாகவும் பாரசீக வரலாற்றின் காட்சி பிரதிநிதித்துவமாகவும் செயல்படுகின்றன.,” என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா, என்று தகவல் தேடினோம். அப்போது, இது உண்மையான புகைப்படம் கிடையாது என்றும், AI தொழில்நுட்பம் மூலமாக தயாரிக்கப்பட்ட புகைப்படம் என்றும், தெரியவந்தது. 

முதலில், ஈரான் நாட்டில் Persian Bridge என்று ஏதேனும் உள்ளதா, என விவரம் தேடினோம். இதன்படி, அங்கு The Persian Gulf Bridge என்ற பெயரில் பாலம் ஒன்று கட்டப்பட்டு வருவதாகச் செய்திகள் காண கிடைத்தன. 

Link 1 l Link 2 l Link 3 l Link 4 

ஆனால், குறிப்பிட்ட Persian Gulf Bridge தொடர்பான புகைப்படங்களுக்கும், நாம் ஆய்வு செய்யும் புகைப்படத்திற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. 

அடுத்தப்படியாக, நாம் ஆய்வு செய்யும் புகைப்படத்தை கூகுள் உதவியுடன் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இதனை முதன்முதலாக, AI உதவியுடன் தயாரித்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நபரின் பதிவு லிங்க் கிடைத்தது. 

அந்த நபரே, இது AI உதவியுடன் தயாரிக்கப்பட்ட புகைப்படம் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஈரானை பெருமைப்படுத்தும் விதமாக அந்த நபர் இதுபோன்று நிறைய புகைப்படங்களை, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

இதுதொடர்பாக, நமது Fact Crescendo Srilanka குழு ஏற்கனவே ஃபேக்ட்செக் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்…

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் உண்மையானதல்ல; AI மூலமாக தயாரிக்கப்பட்டது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமைக்கப்பட்டுள்ள ‘பாரசீக பாலம்’ இதுவா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

Leave a Reply