
‘‘தகப்பன் பெயர் தெரியாதவர்களே திராவிடர்கள்’’ என்று சுப. வீரபாண்டியன் புத்தகம் எழுதியதாகக் கூறி சமூக வலைதளங்களில் ஒன்று பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’தகப்பன் பெயர் தெரியாதவர்களே திராவிடர்கள். சுப. வீரபாண்டியன்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பார்ப்பதற்கு, புத்தகம் ஒன்றின் அட்டைப் படம் போன்றுள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். இதுதொடர்பாக, சுப. வீரபாண்டியன் தரப்பில் கேட்டோம். அப்போது, ‘’ மொழியும் வாழ்வும் (மேடைப் பொழிவுகள்) என்ற பெயரில் கடந்த 2023ம் ஆண்டு நாங்கள் ஒரு புத்தகம் வெளியிட்டோம். அதன் அட்டைப் படத்தை எடுத்து, வேண்டுமென்றே எடிட் செய்து, இவ்வாறு வதந்தி பரப்புகிறார்கள்,’’ என்று தெரிவித்தனர்.
அடுத்தப்படியாக, ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் குறிப்பிட்ட புத்தகத்தின் லிங்க் கிடைத்தது. அதனை ஆதாரத்திற்காக இங்கே இணைத்துள்ளோம்.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட அட்டைப் படம், எடிட் செய்யப்பட்டது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram
Title:‘தகப்பன் பெயர் தெரியாதவர்களே திராவிடர்கள்’ என்று சுப. வீரபாண்டியன் புத்தகம் எழுதினாரா?
Fact Check By: Pankaj IyerResult: Altered


