‘விஜய் மக்களை ரோட்டில் விட்டுவிட்டு போயிட்டார்’ என்று நடிகை ரோஜா கூறினாரா?

False அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

‘’விஜய் மக்களை ரோட்டில் விட்டுவிட்டு போயிட்டார்,’’ என்று நடிகை ரோஜா கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ விஜய் மக்களை ரோட்டில் விட்டுவிட்டு போயிட்டார். 

மக்களுக்காக நிற்கலை. 

 – செருப்பால அடிச்சிருக்காங்க நடிகை ரோஜா 👌,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2   

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இதற்கும், நடிகர் விஜய் கரூர் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசல் உயிரிழப்புகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்று தெரியவந்தது. ஆம், கரூர் சம்பவம் ஏற்பட்டது கடந்த செப்டம்பர் மாதம். 

ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ரோஜா பேசும் வீடியோ எடுக்கப்பட்டது 2025, ஜூலை மாதம். 

அடுத்தப்படியாக, ரோஜா பேசுவது சக தெலுங்கு நடிகர் மற்றும் அரசியல்வாதி பவன் கல்யாண் பற்றி… இதனை விஜய் கரூர் சென்ற சம்பவத்துடன் தொடர்புபடுத்தி, தவறான தகவல் பரப்புகிறார்கள். 

கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…

News 18 Tamil l One India Tamil l Vikatan 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘விஜய் மக்களை ரோட்டில் விட்டுவிட்டு போயிட்டார்’ என்று நடிகை ரோஜா கூறினாரா?

Fact Check By: Pankaj Iyer  

Result: False

Leave a Reply